Skip to main content

சாப்பிட நிறுத்திய கேப்பில் பேருந்தில் நகை திருட்டு... போலீசார் விசாரணை!

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

 Jewelry theft on a bus that stopped to eat ... Police investigation!

 

தனியார் பேருந்து பயணத்தின் பொழுது உணவு அருந்துவதற்கு பேருந்து உணவகத்தில் நிறுத்தப்பட்ட பொழுது பயணி ஒருவரின் 4 சவரன் தங்க நகை, 8 கிராம் வைர நகை பேருந்தில் இருந்து திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

கர்நாடக மாநிலம் பெங்களூர் கோரமங்கலா பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்பவர் அவரது குடும்பத்தாருடன் கோயம்புத்தூரில் உள்ள உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். ஆர்த்தியுடன் அவரது தந்தை ஆல்சார், தாய் உமாராணியும் சென்றுள்ளார். அப்பொழுது அந்த தனியார் பேருந்து கிருஷ்ணகிரி-கோவை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் உணவு அருந்துவதற்காக நின்றுள்ளது. அதனையடுத்து ஆர்த்தி அவரது தந்தை தாயுடன் அங்கு உணவு சாப்பிட இறங்கியுள்ளார்.

 

 Jewelry theft on a bus that stopped to eat ... Police investigation!

 

அப்பொழுது உடன் கொண்டுவந்த 8 சவரன் தங்க நகை மற்றும் 8 கிராம் வைர நகைகளை பேருந்தில் பேக்கிலேயே விட்டுவிட்டு மூவரும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் சாப்பிட்ட பின் பேருந்துக்கு வந்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் கொண்டுவந்த பேக் திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ந்த ஆர்த்தி, உள்ளே சோதித்து பார்த்ததில் நகைகள்  திருடப்பட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொண்டுவந்த சில்வர் குடமும் மர்ம நபர் ஒருவரால் திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி போலீசாரிடம் ஆர்த்தி புகாரளித்த நிலையில் அந்த பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர், உணவகத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.