Skip to main content

கத்தி முனையில் பெண்களிடம் நகை கொள்ளை

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

Jewelry robbery  women knife point

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை - சேலம் நெடுஞ்சாலையில் உளுந்தூர் பேட்டையில் இருந்து மேற்கில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வெள்ளையூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் இவரது மனைவி பல்கிஸ் பீவி (63), அவரது மருமகள் ஷேகா (20) ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று பட்ட பகல் ஒரு மணி அளவில் திடீரென்று முக கவசம் அணிந்த மூன்று பேர் கொண்ட மர்ம மனிதர்கள் அப்துல் ரஹீம்  வீட்டுக்குள் புகுந்தனர்.

 

பெண்கள் இருவரும் சுதாரிப்பதற்குள் திடீரென அவர்கள் இருவரது கழுத்தில் கத்தியை வைத்து கத்தி சத்தம் போட்டால் கழுத்தை அறுத்துக் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். மேலும் அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்ததுடன், வீட்டில்  இருந்த பீரோவை திறந்து 25 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கொள்ளையர்கள் பெண்கள் இருவரையும் குளியலறையில் தள்ளி கதவை பூட்டிவிட்டு தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து அதே பகுதியை சேர்ந்த அவர்களது உறவினர் ஒருவர் கொள்ளைச் சம்பவம் நடந்த அப்துல் ரஹீம் வீட்டிற்கு சென்ற நிலையில் குளியலறை கதவைத்திறந்து பெண்கள் இருவரையும் வெளியே வரவழைத்தார். 

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மகேஷ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மக்கள் அடுத்தடுத்து குடியிருக்கும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் முக கவசத்துடன் வந்த 3 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 25 பவுன் கொள்ளையடித்து சென்ற சம்பவம் வெள்ளையூர் உளுந்தூர்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் பயத்தை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தனிப்படை அமைத்து தீவிரமாக கொள்ளையர்களை தேடி வருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.