Skip to main content

“இப்படி காலத்தோடு தண்ணீர் வந்ததைப் பார்த்து 10 வருடம் இருக்கும்” - நெகிழ்ச்சியில் பேசிய பெண்கள்!!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

"It will be 10 years since the water came with such time" - Women who spoke in happily

 

பல வருட காத்திருப்புக்கு பிறகு கடந்த சில வருடங்களாக காவிரித் தண்ணீர் ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக திறந்துவிடப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியும் நடக்கிறது. குறுவை சாகுபடிக்கு உழவடை மானியத்தையும் அரசு வழங்கி டெல்டா விவசாயிகளை உற்சாகப்படுத்திவருகிறது. அதேபோல இந்த வருடமும் ஜூன் 12ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மேட்டூரில் தண்ணீரை திறந்துவைத்தார். 16ஆம் தேதி கல்லணையை அமைச்சர்கள் திறந்துவைத்தனர்.

 

ஆங்காங்கே கால்வாய்க்குள் பணிகள் நடந்ததால் குறைந்த அளவே திறக்கப்படும் தண்ணீர், மிதமான வேகத்தில் கடைமடை வரை செல்ல சில நாட்கள் கூடுதலாக ஆனது. காரணம் கடந்த ஆண்டு கூடுதல் தண்ணீர் திறந்த நிலையில் பல இடங்களிலும் உடைப்பு ஏற்பட்டதுதான். 16ஆம் தேதி திறந்த கல்லணைத் தண்ணீர் கடைமடைப் பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 21ஆம் தேதி மாலை வந்து சேர்ந்தது. 22ஆம் தேதி அதிகாலை வேம்பங்குடி கிழக்கு, மேற்பனைக்காடு வந்தடைந்தது.

 

"It will be 10 years since the water came with such time" - Women who spoke in happily

 

தொடர்ந்து 312 கனஅடி தண்ணீர் நெய்வத்தளி வழியாக சென்று 22ஆம் தேதி இரவு நாகுடிக்குச் சென்றது. நாகுடியில் தண்ணீரை வரவேற்க காத்திருந்த விவசாயிகள் இரவு நேரம் என்பதால் மின் விளக்குகளை அமைத்திருந்தனர். முன்னதாக மேற்பனைக்காடு தண்ணீர் பிரியும் இடத்தில் உள்ள பாலத்தில் வாழை மர தோரணங்கள் கட்டி நெல்விதை, மலர்கள் தூவி விவசாயிகள் வரவேற்றனர். தொடர்ந்து அப்பகுதி விவசாயப் பெண்கள் கும்மியடித்து, குழவை போட்டு, இருகரம் கூப்பி காவிரித் தாயை வணங்கி மலர் தூவி வரவேற்றனர்.

 

மேலும் பெண்கள் பேசியதாவது, “இப்படி காலத்தோடு தண்ணீர் வந்ததைப் பார்த்து 10 வருசம் ஆச்சு. இப்ப தண்ணீரைப் பார்த்தது கடவுளைப் பார்த்தது போல இருக்கு” என்று நெகிழ்ந்து பேசி மகிழ்ந்தனர். தொடர்ந்து தண்ணீர் வந்தால் கடைமடையிலும் குறுவை, சம்பா சாகுபடி செய்ய முடியும் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.