Skip to main content

''பத்து வருஷமா தண்ணீர் கொண்டுவர நினைக்கவில்லை... ஐ.பி.முயற்சியால்தான் சாத்தியமானது''-எம்.பி.வேலுச்சாமி பேட்டி!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

 it is possible only through IP initiative" - ​​MP Veluchamy - Interview

 

திண்டுக்கல மாவட்டம் நிலக்கோட்டையில் தண்ணீர் வரும் வாய்க்கால்களைத் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆவாரம்பட்டி கண்மாய் அருகே நீர்வரத்து வாய்க்காலைப் பார்வையிட வேலுச்சாமி சென்றபோது அங்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் ஓடி வருவதைப் பார்த்த மகிழ்ச்சியில் கிராம இளசுகள் தண்ணீரில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கால்வாயில் வரும் மீன்களைப் பிடிப்பதற்காக சில பெண்கள் வலைவிரித்து தண்ணீருக்குள் அமர்ந்தவாறு காத்திருந்தனர். கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை மகிழ்ச்சியைப் பார்த்து உற்சாகமான எம்.பி மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் ''மீன் கிடைத்ததா?'' எனக் கேட்டார். அவர்களும் கொஞ்சமாகப் பிடித்து வைத்து இருக்கிறோம் என்றனர். எனக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும் என் வீட்டுக்கு இதை எடுத்துச் செல்லவா எனக் கேட்டுவிட்டு, இன்னும் பொறுமையா நிறைய மீன் பிடியுங்கள் எனக் கூறினார்.

 

 it is possible only through IP initiative" - ​​MP Veluchamy - Interview

 

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய வேலுச்சாமி, ''பத்து வருஷமா இருந்த அதிமுக எம்எல்ஏ இந்தப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரணும்'னு கொஞ்சம் கூட  நினைக்கல. வாக்குறுதி கொடுத்து விட்டோம் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்று சொல்லி அமைச்சர் ஐ.பி அறிவுறுத்தலின்படி  ஒவ்வொரு  கண்மாய்க்கும் முறைப்படுத்தி ஆவாரம்பட்டி தண்ணீர் கொண்டு வந்துருக்காங்க. இந்தப் பக்கம் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க. இதுதான் ஸ்டாலின் அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி'' என்று கூறினார்.

 

ராமராஜபுரம் மட்டப் பாறை பகுதியில் நடந்த பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் மனு கொடுத்த 120 பேரில் 90 பேருக்கு உடனடி தீர்வு காணும் விதமாக பட்டாக்களைக் கொடுத்துவிட்டுச் சென்றார். உடன் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.