Skip to main content

''பத்து வருஷமா தண்ணீர் கொண்டுவர நினைக்கவில்லை... ஐ.பி.முயற்சியால்தான் சாத்தியமானது''-எம்.பி.வேலுச்சாமி பேட்டி!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

 it is possible only through IP initiative" - ​​MP Veluchamy - Interview

 

திண்டுக்கல மாவட்டம் நிலக்கோட்டையில் தண்ணீர் வரும் வாய்க்கால்களைத் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆவாரம்பட்டி கண்மாய் அருகே நீர்வரத்து வாய்க்காலைப் பார்வையிட வேலுச்சாமி சென்றபோது அங்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் ஓடி வருவதைப் பார்த்த மகிழ்ச்சியில் கிராம இளசுகள் தண்ணீரில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கால்வாயில் வரும் மீன்களைப் பிடிப்பதற்காக சில பெண்கள் வலைவிரித்து தண்ணீருக்குள் அமர்ந்தவாறு காத்திருந்தனர். கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை மகிழ்ச்சியைப் பார்த்து உற்சாகமான எம்.பி மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் ''மீன் கிடைத்ததா?'' எனக் கேட்டார். அவர்களும் கொஞ்சமாகப் பிடித்து வைத்து இருக்கிறோம் என்றனர். எனக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும் என் வீட்டுக்கு இதை எடுத்துச் செல்லவா எனக் கேட்டுவிட்டு, இன்னும் பொறுமையா நிறைய மீன் பிடியுங்கள் எனக் கூறினார்.

 

 it is possible only through IP initiative" - ​​MP Veluchamy - Interview

 

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய வேலுச்சாமி, ''பத்து வருஷமா இருந்த அதிமுக எம்எல்ஏ இந்தப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரணும்'னு கொஞ்சம் கூட  நினைக்கல. வாக்குறுதி கொடுத்து விட்டோம் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்று சொல்லி அமைச்சர் ஐ.பி அறிவுறுத்தலின்படி  ஒவ்வொரு  கண்மாய்க்கும் முறைப்படுத்தி ஆவாரம்பட்டி தண்ணீர் கொண்டு வந்துருக்காங்க. இந்தப் பக்கம் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க. இதுதான் ஸ்டாலின் அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி'' என்று கூறினார்.

 

ராமராஜபுரம் மட்டப் பாறை பகுதியில் நடந்த பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் மனு கொடுத்த 120 பேரில் 90 பேருக்கு உடனடி தீர்வு காணும் விதமாக பட்டாக்களைக் கொடுத்துவிட்டுச் சென்றார். உடன் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.