Skip to main content

தீட்சிதர்கள் மீது வழக்கு; ஆளுநர் கண்டனம் - நடராஜர் கோயில் வழக்குரைஞர் வரவேற்பு

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

issue of the case against the Nataraja Temple Dikshitars

 

நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது பொய் வழக்கும், குழந்தைகள் மீது தடை செய்யப்பட்ட கன்னித் தன்மையை பரிசோதிக்கும் இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளதைக் கோயில் பொதுதீட்சிதர்கள் சார்பில் வரவேற்கிறோம் என கோயில் வழக்குரைஞர் ஜி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 

சிதம்பரம்  நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் வழக்குரைஞர் ஜி.சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழக ஆளுநர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீதுள்ள வெறுப்பால் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு கன்னித் தன்மை பரிசோதனையான தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தவரை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர கடந்த ஒரு வருடமாக கோயிலுக்கு பல்வேறு கடிதங்கள் அளித்து வருகின்றனர். அதற்கு தீட்சிதர்கள் சார்பில் சட்ட விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் சில தீட்சிதர்களுக்கு எதிராக சிறார் திருமண தடை சட்டத்தின் கீழ் சில வழக்குகள் பதியப்பட்டன. அந்த வழக்குகளில் சில தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற வழக்குகளில் அதிக பட்ச தண்டனை இரு வருடம் தான். அதற்கு கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 7 வருடங்களுக்கு கீழ் தண்டனை பெறும் குற்ற வழக்குகளில் கைது நடவடிக்கை அவசியமற்றது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்குகளில் கைது தேவையற்றது. இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறை தேவையற்ற வகையில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இரு விரல் சோதனையை பாதிக்கப்பட்ட மைனர் சிறுமியிடம் நடத்தியுள்ளது. இதுகுறித்து அக்டோபர் மாதம் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளேன்.

 

மேலும் பாதிக்கப்பட்ட தீட்சிதர்கள் தங்க கணேஷ் தீட்சிதர், ஈஸ்வர தீட்சிதர் 24-10- 22ல் தேசிய குழந்தைகள் உரிமை கமிஷனுக்கும், தமிழக குழந்தைகள் உரிமை கமிஷன், தமிழக உள்துறை செயலாளருக்கும், தமிழக காவல்துறை தலைவருக்கும் மனு அனுப்பினார்கள். பொதுதீட்சிதர்கள் அரசு  சட்டத்தை எப்போது மதித்து வருகிறார்கள், அதனை மீறி செயல்படவில்லை. கோயில் பூஜை செய்வதற்கு 21 வயது திருமணமான ஆண் தான் தேவையே தவிர, 21வயதிற்கு குறைந்த மைனர் சிறுவனுக்கோ, மைனர் சிறுமிக்கோ திருமணம் செய்தால்தான் பூஜை செய்ய முடியம் என்று தவறாக பிரசாரம் நடைபெறுகிறது. அது தவறானது. மேலும் இந்த வழக்குகளை பதிந்து மனித உரிமை மீறலும், குழந்தைகள் உரிமை மீறலும் நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்து அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த வழக்குகளை தமிழக காவல்துறை விசாரிக்கக்கூடாது. 

 

அதனை மத்திய புலனாய்வுத் துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் இந்த விசாரணை சரியாக இருக்கும் என தீட்சிதர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. தற்போது தமிழக ஆளுநரே இரு விரல் சோதனையை மைனர் குழந்தைகளிடம் நடத்தக்கூடாது. அது தவறு என ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது இரண்டு விதத்தில் தவறு. குழந்தைகள் உரிமை சட்டத்தில் இருவிரல் பரிசோதனை தேவையற்றது. மற்றொன்று இருவிரல் பரிசோதனை செய்யப்படும் மைனர் பெண், தன் வாழ்நாள் முழுவதும் பாதிப்பிலிருந்து விடுபட முடியாது என்பதாகும். நீதிமன்ற தடையை மீறி, சட்டவழிமுறைகளை பின்பற்றாமல் காவல்துறையினர்  தமிழக அரசுக்கு உதவியாக சிதம்பரம் நடராஜர் கோயில் எப்படியாவது கையகப்படுத்த வேண்டும்  என்ற ஒரே காரணத்திற்காக தீட்சிதர்களை துன்புறுத்துவதற்காக இதுபோன்ற சோதனைகளை செய்துள்ளார்கள். தமிழக ஆளுநர் இருவிரல் சோதனையை செய்யக்கூடாது என பொதுவெளியில் சொல்வதால், இனிமேல் இதுபோன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டும் என்றும், காவல்துறை மனித உரிமைகள் மதித்தும் நடக்க வேண்டும்” என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“பாசிச சக்திகளின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க பாடுபடுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
We will strive to stop the abuse of power by fascist forces CM MK Stalin

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சராக பொன்முடி பதவியேற்றதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

We will strive to stop the abuse of power by fascist forces CM MK Stalin

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம் வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.