Skip to main content

பழனி தொகுதியின் சென்டிமென்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐ.பி.செந்தில்குமார்!!

Published on 05/05/2021 | Edited on 06/05/2021

 

IP Senthilkumar puts an end to Palani constituency sentiment

 

பழனி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை ஒரு சென்டிமென்ட் இருந்து வருகிறது. அதாவது இதுவரை பழனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.கள் யாரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அப்படிப் போட்டியிட்டாலும், அந்த வேட்பாளர் படுதோல்வியைச் சந்திக்க நேரிடும். அப்படி ஒரு சென்டிமென்ட் பழனி தொகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் மத்தியில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

 

இந்நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏவான தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில் குமார், இந்த முறையும் தி.மு.க சார்பில் பழனியில் களம் இறக்கப்பட்டார். பழனி தொகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் மத்தியில் ஐ.பி.செந்தில்குமார் மீண்டும் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்ற பேச்சு வெளிப்படையாகவே இருந்தது.

 

IP Senthilkumar puts an end to Palani constituency sentiment

 

இந்த தகவல்  ஐ.பி.செந்தில்குமார் காதுக்கு எட்டியது. அதைத்தொடர்ந்து தான் அந்த சென்டிமென்டுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் களத்தில் தீவிரம் காட்டிய ஐ.பி.எஸ், எந்தெந்தப் பகுதிகள் பலவீனமாக இருக்கிறதோ அதைக் கண்டறிந்து அங்கு கட்சிக்காரர்களை உசிப்பி விட்டு கவனம் செலுத்தினார். அதோடு ஐ.பி.செந்தில்குமாரின் மனைவியான மெர்சி செந்தில்குமார் மற்றும் அவருடைய 12 வயது மகன் ஆதவன் உள்பட குடும்பமே தேர்தல் களத்தில் குதித்து ஐ.பி.செந்தில்குமார் வெற்றிக்காக உழைத்தனர்.

 

அதுபோல் கூட்டணிக் கட்சி ஓட்டுகள் மற்றும் சிறுபான்மை ஓட்டுகளும் ஐ.பி.எஸ்.க்கு கைகொடுத்தது அதன் மூலம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ரவி மனோகரனைவிட 30,056 ஓட்டுகள் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பழனி தொகுதியின் சென்டிமெண்டுக்கே முற்றுப்புள்ளி வைத்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் உள்பட அரசியல் கட்சியினர் பலர் ஐ.பி.செந்தில்குமாரை  பாராட்டியும் வருகிறார்கள். அதுபோல் பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.