Skip to main content

ஒட்டன்சத்திரத்தில் இந்திய அளவிலான கபடி போட்டி - அமைச்சர் சக்கரபாணி பேட்டி

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

 India level kabaddi tournament in Ottanchatra-Interview with Minister Chakrapani

 

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரத்தில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி நடத்தப்பட உள்ளதாக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருக்கும் கணக்கம்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் வரவேற்றார். எம்.பி.வேலுச்சாமி முன்னிலை வகித்தார். விழாவில் 2,028 பயனாளிகளுக்கு 5.82 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

 

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது,  ''திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரத்தில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அகில இந்திய அளவிலான ஏ கிரேடு கபடி போட்டி நடக்க உள்ளது. இப்போட்டியில் ப்ரோ கபடி மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆண் பெண் என இரு பிரிவாக போட்டி நடத்தப்பட உள்ளது. ஆண்கள் பிரிவில் முதல் நான்கு  இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே தலா 20 லட்சம், 15 லட்சம், 7.5 லட்சம், 7.5 லட்சம் என பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

 

அதுபோல்  பெண்கள் அணிகளுக்கு முறையே 15 லட்சம், 10 லட்சம் மற்றும் 5 லட்சம், 5 லட்சம் என வழங்கப்பட உள்ளது. மேலும் ஆண்கள் பிரிவில் சிறந்த மூன்று வீரர்களுக்கும், பெண்கள் பிரிவில் சிறந்த மூன்று வீராங்கனைகளுக்கும் கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.  போட்டியில் இறுதிவரை வந்து வெற்றி வாய்ப்பை இழக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா நான்கு அணிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.'' என்று கூறினார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முதன்முறையாக இடம் பிடித்த தமிழ்நாட்டு வீரர்; வெவ்வேறு கேப்டன்கள் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

First Tamil Nadu player to place; Indian team announcement with different captains!

 

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில்  விளையாட உள்ளது. இந்த மூன்று போட்டிகளுக்குமான அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா மறுபடியும் டி20 அணிக்கு கேப்டனாக செயல்படுவாரா என்று குழப்பம் நீடித்து வந்த நிலையில், சூரியகுமார் யாதவே மீண்டும் டி20 அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

ரோகித் சர்மாவும், விராட் கோலியும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறிது ஓய்வு தேவைப்படுவதாக தெரிவித்ததால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பும்ராவுக்கும் டி20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்த தென்னாப்பிரிக்கா தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சன், ரஜத் பட்டிதர் மீண்டும் ஒரு நாள் அணிக்கு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த சாய் சுதர்ஷன் முதன்முறையாக இந்திய ஒரு நாள் அணியில் இடம் பிடித்துள்ளார். முகமது ஷமி காயத்தைப் பொறுத்து இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய டி20 அணி:

 

ஜெய்ஸ்வால், கில், ருத்ராஜ், திலக் வர்மா, சூரியகுமார்(C) ரிங்கு சிங், ஸ்ரேயாஸ், இஷான் கிஷன்(WK), ஜித்தேஷ் சர்மா (WK), ரவீந்திர ஜடேஜா(VC), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சகர்.

 

இந்திய ஒரு நாள் அணி:

 

ருதுராஜ், சாய் சுதர்ஷன், திலக் வர்மா, ரஜத் பட்டிதர், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ், கே எல் ராகுல்(C), சஞ்சு சாம்சன்(WK), அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சகல், முகேஷ் குமார், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங், தீபக் சகர்

 

இந்திய டெஸ்ட் அணி:

ரோகித் (C)  கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ், ருதுராஜ், இஷான் கிஷன்(WK) கே எல் ராகுல்(WK) ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா (VC) பிரசித் கிருஷ்ணா

 

இதில் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ், ஸ்ரேயாஸ் மூன்று விதமான அணியிலும் இடம் பிடித்துள்ளனர். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் இடம் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்களில் முகேஷ் குமார் மூன்று விதமான அணிகளிலும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- வெ.அருண்குமார் 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

விராட் கோலியின் சாதனை; 5 வருடங்களுக்கு முன்பே கணித்த மறைந்த ரசிகர்!

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Virat Kohli's record; Fan who predicted 5 years ago!

 

கிரிக்கெட் கடவுள், ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பல சாதனைகளை கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளார், அந்த வகையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதம் அடித்து அசைக்கமுடியாத மைல் கல் ஒன்றை கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்தியிருந்தார். இதனை கடந்த (15.11.2023) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2023 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் சச்சின் அடித்த அந்த 49வது சதத்தை விராட் கோலி முறியடித்து உலக சாதனை படைத்தார்  

 

இந்த சாதனையை தொடர்ந்து  நியூசிலாந்து அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி; இதனை கொண்டாடும் விதமாக சமூக வலைத்தளங்களில் விராட் கோலியை புகழ்ந்து பதிவிட்டு வந்தனர், இதில் 12 வருடங்களுக்கு முன்பு பதிவிட்ட  பேஸ்புக்  பதிவு ஒன்று வைரலாகி உள்ளது 

 

Virat Kohli's record; Fan who predicted 5 years ago!

 

2012ஆம் ஆண்டு பதிவிட்ட அந்த பழைய பேஸ்புக் பதிவு கேரளாவைச் சேர்ந்த விராட் கோலியின் தீவிர ரசிகரான சிஜூ பாலநந்தனின் பதிவு; அப்பதிவில் அவர் கூறியிருப்பது,  “விராட் கோலி ஒரு நாள், சச்சின்  டெண்டுல்கரின் 49 சதங்களை முறியடிப்பார்” என்றும், தொடர்ந்து விராட் கோலியின் 35வது சதம் வரை அந்த பதிவின் கீழ் அப்டேட் செய்து வந்த சிஜூ பாலநந்தன் கார் விபத்தில் காலமானார்; இதன் பிறகு அவரின் நண்பர்கள்  விராட் கோலி அடித்த அடுத்தடுத்த சதத்தை இறந்த நண்பனின் பேஸ் புக் பதிவின் கீழ் அப்டேட் செய்து வந்துள்ளனர்.

 

Virat Kohli's record; Fan who predicted 5 years ago!

 

அரையிறுதி ஆட்டத்தில் சிஜூ பாலநந்தன் சொன்னது போல் விராட் கோலி, சச்சினின் சாதனையை முறியடித்த நிலையில், சிஜூவின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. உயிரோடு அவர் இல்லை என்றாலும், அவரின் அந்த வார்த்தைகள் இன்றளவும் உயிர் வாழ்வதாக அவரது நண்பர்களும் நெட்டிசன்களும் உருக்கம் தெரிவிக்கின்றனர்.

- காலேப் கீர்த்தி தாஸ்

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்