Skip to main content

குடியே கதியான சப் கலெக்டர் மகன்... கடலூரை உலுக்கிய கொலை!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

கடலூரில் மதுகுடிக்க பணம் தராததால் ஓய்வுபெற்ற சப் கலெக்டர் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் அணைக்குப்பம் மீனாட்சி நகரில் வசிந்துவந்தார் துணை ஆட்சியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற சுப்பிரமணியன். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே சுப்பிரமணியன் ஓய்வுபெற்ற நிலையில், சில  ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். சுப்பிரமணியனுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்த நிலையில், பிள்ளைகளுக்குத் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்டனர். கார்த்திக் என்ற மகன் மட்டும் வீட்டிலேயே தந்தை  சுப்பிரமணியனுடன் இருந்துள்ளார். 

 

பொறியியல் பட்டதாரியான கார்த்திக் வேலைக்கு எதுவும் செல்லாமல் மதுவிற்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (18.10.2021) காலை இவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதன்பிறகு அன்று பிற்பகல் 3 மணியளவில் தந்தை இறந்துவிட்டதாக ப்ரீசர் பாக்ஸ் ஆர்டர் செய்துள்ளான் கார்த்திக். கார்த்திக்கின் வீட்டிற்கு ப்ரீசர் பாக்ஸ் கொண்டு சென்றவர்கள் உள்ளே சென்றதும் அதிர்ந்தனர். காரணம் உள்ளே  சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் மகன் கார்த்திக் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டதில் வீட்டின் ஒரு அறையில் மலைபோல காலி மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல் சிகரெட் பெட்டிகளும் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. கார்த்திக் எந்த அளவிற்குக் குடிக்கு அடிமையானவர் என்பது அங்கு கிடந்த மதுபாட்டில்களால் ஊர்ஜிதமானது. மது பாட்டில்களுக்கு இடையே படுக்கை இருக்கும் அளவிற்கு குடிக்கு கார்த்திக் அடிமையானது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தந்தையின் பென்ஷன் பணத்தை வாங்கிக் குடித்துவந்ததாகவும், குடிக்கப் பணம் தராததால் இரும்பு கம்பியால் தாக்கி கைகளை உடைத்துக் கொன்றுவிட்டதாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளான். குடியே கதியான சப் கலெக்டர் மகன், தந்தையைக் கொலை செய்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.