Skip to main content

தனிமையில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடி... காதலனை அடித்து கொள்ளிடம் ஆற்றில் தூக்கியெறிந்த கஞ்சா போதை கும்பல்!

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

திருச்சியில் தனியாக பேசிக்கொண்டிருந்த காதலர்களிடம் அத்துமீறிய கஞ்சா போதை கும்பல் ஒன்று காதலனை அடித்து காவிரி கொள்ளிடம் ஆற்றில் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

incident thiruchy kollitam


திருச்சியில் அண்ணா பொறியியல் கல்லூரியில் படித்துவந்த துறையூரை சேர்ந்த ஜீவித் என்ற இளைஞர் அவருடைய காதலியுடன் சமயபுரம் டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆற்றுப் பாலத்தின் அடியில் அமர்ந்து தனிமையில் பேசிக்கொண்டிருந்தார். அதே இடத்தில் சற்று தொலைவில் மது அருந்தி கொண்டும் கஞ்சா புகைத்து கொண்டும் இருந்த ஐந்து பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல் அந்த காதல் ஜோடியை மிரட்டி உள்ளது.

 

incident thiruchy kollitam


அதேபோல் அந்த பெண்ணிடம் கஞ்சா கும்பல் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளது. அதை காதலன் ஜீவித் தடுத்தபோது அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பி நழுவி ஓடியுள்ளார். ஆனால் தலைநிக்கா  கஞ்சா போதையில் இருந்த அந்த கும்பல் இளைஞர் ஜீவித்தை அடித்து கொள்ளிடம் ஆற்றில் தூக்கி வீசியுள்ளது. தொடர் மழை காரணமாக தற்பொழுது கொள்ளிடம் ஆற்றில் 16,000 அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் நீரின் வேகத்தில் ஆற்றில் அடித்து தூக்கி வீசப்பட்ட ஜீவித் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.

அந்த போதை கும்பலிடம் இருந்து தப்பிய அந்த இளம்பெண் அலறியடித்து ஓடி வருவதை கண்ட அந்த ஊரைச் சேர்ந்த 3 பேர் உதவி செய்ய முன்வந்துள்ளனர். அவர்கள் சென்று கஞ்சா போதை கும்பலை சேர்ந்த 2 பேரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் இருவரும் மண்ணச்சநல்லூரில் உள்ள தேவிமங்கலத்தைச் சேர்ந்த கலையரசன், புள்ளம்பாடி வலக்காடு பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பதும்  விசாரணையில் தெரியவந்தது.

 

incident thiruchy kollitam

 

கைதுசெய்யப்பட்ட அந்த இருவரிடமும் மற்ற 3 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் ஜீவித் தூக்கி எறியப்பட்ட இடத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் தேடியும் ஜீவித் உடலானது இதுவரை கைப்பற்ற படவில்லை. சில உபகரணங்கள்,  தொழிநுட்ப கருவிகள் சரியாக இல்லாததால் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை அந்த மீட்புப்பணி அனைத்தும் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.