Skip to main content

'எங்கள் தற்கொலை முடிவுக்கு வளர்ப்பு மகனே காரணம்' - டைரியில் எழுதிவைத்துவிட்டு தம்பதி தற்கொலை!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

incident in thenkasi... police investigation

 

'எங்கள் தற்கொலை முடிவுக்கு எங்களது வளர்ப்பு மகனே காரணம்' என எழுதிவைத்துவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

incident in thenkasi... police investigation

 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவில் வசிந்துவந்தனர் ராமசாமி - மாரியம்மாள் தம்பதி. இவர்களுக்குத் திருமணமாகி நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாததால் 21 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து அஜித்குமார் என பெயர்சூட்டி வளர்த்துவந்தனர். ராமசாமி - மாரியம்மாள் தம்பதி வளர்ப்பு மகன் அஜித்துக்காக 'அஜித் இல்லம்' என்ற வீட்டையும் கடந்த 2007ஆம் ஆண்டு கட்டியுள்ளனர்.

 

ajith

 

இந்நிலையில் தற்போது வாலிபரான அஜித்குமார், கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகிப் பெற்றோர்களிடம் அடிக்கடி சண்டைபோடுவது, மிரட்டுவது எனக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். சில மாதங்களாகச் சொத்துக்களைத் தனது பெயரில் எழுதிவைக்க வேண்டும் எனப் பிரச்சனை செய்துவந்துள்ளார் அஜித்.

 

incident in thenkasi... police investigation

 

இதனால் மனமுடைந்த தம்பதியினர் சில நாட்களாக வீட்டில் இல்லாத நிலையில் இருவரையும் உறவினர்கள் தேடிவந்தனர். ஆலங்குளத்திற்கு வெளியே இருக்கும் சீவலசமுத்திரம் என்ற இடத்தில் சொந்த தோட்டப்பகுதியில் ராமசாமி - மாரியம்மாள் தம்பதி கீழே விழுந்து கிடப்பதாகத் தகவல் வெளியாக, உறவினர்கள் சென்று பார்க்கையில் பூச்சி மருந்து குடித்து இருவரும் ஆபத்தான நிலையில் கிடந்தது தெரியவந்தது. இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். அவர்கள் அருகிலேயே ஒரு சிறிய டைரி ஒன்றும் இருந்தது. அதில், ‘எங்கள் தற்கொலை முடிவுக்கு எங்களது வளர்ப்பு மகன் அஜித்தே காரணம். அவனுக்கு வீடோ தோட்டமோ கிடையாது. அவனை வீட்டைவிட்டுத் துரத்த வேண்டும்’ என எழுதப்பட்டிருந்தது.

 

இது தொடர்பாக பாப்பாக்குடி போலீசாரிடம் உறவினர்கள் புகார் தெரிவிக்க, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

udanpirape

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.