Skip to main content

சூட்கேசில் பெண் சடலம்... சேலம் மாநகரை அதிரவைத்த கொலை!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

incident in selam city... police investigation

 

சேலத்தில் மஜாஜ் சென்டர் நடத்திவந்த பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் உடல் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன். திமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்த முன்னாள் நகராட்சி கவுன்சிலரான இவர், குமாரசாமிபட்டியில் வீடுகள் கட்டி வாடைக்கு விட்டுள்ளார். இவரது வீட்டின் இரண்டாவது மாடியில் கர்நாடகாவைச் சேர்ந்த முகமது சதாம், தனது மனைவி தேஜஸ் மோண்டல் உடன் இரண்டு வீடுகள் எடுத்துத் தங்கியிருந்தார். சேலம் அழகாபுரம், பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய இடங்களில் முகமது சதாம் - தேஜஸ் மோண்டல் தம்பதியினர் மசாஜ் சென்டர் நடத்திவந்தனர். ஒரு வீட்டில் கணவன் மனைவியும், இன்னொரு வீட்டில் மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்களும் தங்கியிருந்தனர்.

 

udanpirape

 

கடந்த 10 நாட்களுக்கு மேலாக கூடுதலாக 3 பெண்கள் தேஜஸ் மோண்டல் வீட்டுக்கு வந்து தங்கி மசாஜ் சென்டரில் வேலை செய்துவந்தனர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சதாம் வேலை விஷயமாக சென்னை வந்துள்ளார். அதனையடுத்து, சென்னையிலிருந்து மனைவி தேஜஸை சதாம் அழைக்க அவர் செல்ஃபோனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர் நடேசனை தொடர்புகொண்ட சதாம், வீட்டில் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். இதனையடுத்து வீட்டுக்குச் சென்ற நடேசன், சதாம் - தேஜஸ் தம்பதி தங்கியிருந்த வீட்டைப் பார்த்துள்ளார், அது பூட்டியிருந்துள்ளது. அருகில் மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்கள் தங்கியிருந்த வீட்டையும் பார்த்துள்ளார். அந்த வீடும் பூட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த நடேசன், காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். 

 

incident in selam city... police investigation

 

அதனையடுத்து அங்கு வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்க்கையில் வீட்டின் அலமாரியில் சந்தேகப்படும் வகையில் ஒரு பெரிய சூட்கேஸ் இருந்துள்ளதைக் கண்டு, அதனைத் திறந்து பார்க்கையில் உள்ளே பெண் சடலம் ஒன்று இருந்தது. அது தேஜஸ் மோண்டலின்  உடல் என்பதை ஊர்ஜிதம் செய்த போலீசார், உடலை பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை ஆய்வுசெய்து தடயங்கள் சேகரிக்கப்பட்டள்ளன. மேலும், இது தொடர்பாக தேஜஸின் கணவர் முகமது சதாமிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.