Skip to main content

பேருந்து நடத்துநர் கழுத்தை நெரித்து கொலை! ; தீர்த்துக் கட்டிய காதலி!!

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

incident in salem... police investigation

 

சேலம் அருகே, ஆண் நண்பர்களுடன் பழகுவதை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த காதலி, வாழ்க்கைக் கொடுத்தவரையே கழுத்தை நெரித்துத் தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலத்தை அடுத்துள்ள மல்லமூப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (49). தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை செய்து வந்தார். இவர், 28 ஆண்டுக்கு முன்பு புஷ்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 27 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கடந்த 20 ஆண்டுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து, தளவாய்ப்பட்டியில் தனியாக வசித்து வந்தார்.

 

இவரும், தளவாய்ப்பட்டியைச் சேர்ந்த சித்ரா என்பவரின் மகள் உமா மகேஸ்வரி (35) என்பவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். நாளடைவில் நெருக்கம் அதிகமாகவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். உமாமகேஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து சில ஆண்டாக தாயார் வீட்டில் வசித்து வந்த நிலையில்தான் சுப்ரமணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 11) இரவு சுப்ரமணி தனது வீட்டில் உள்ள கட்டிலில் பேச்சுமூச்சின்றி கிடப்பதாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உறவினர்கள் சென்று பார்த்தபோது சுப்ரமணி கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து இரும்பாலை காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

முதல்கட்ட விசாரணையில், சுப்ரமணி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சுப்ரமணி வீட்டுக்கு வெள்ளிக்கிழமையன்று இரவு உமாமகேஸ்வரி, 2 ஆண்களை அழைத்து வந்திருக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதைத் தொடர்ந்து உமா மகேஸ்வரியை பிடித்து காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

 

குடும்ப வாழ்க்கையில் பரஸ்பரம் தோல்வி கண்டிருந்த உமாமகேஸ்வரியும்,  சுப்ரமணியும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். அதன்பிறகு ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் உமா மகேஸ்வரிக்கு வேறு சில ஆண்களுடனும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. வேலைக்காக வெளியே சென்ற நேரங்களில் உமா மகேஸ்வரி, சில ஆண்களை வீட்டுக்கே வரவழைத்து நெருக்கமாக இருந்துள்ளார். இதையறிந்த சுப்ரமணி, அவரை பலமுறை கண்டித்திருக்கிறார்.

 

இதை கொஞ்சமும் ரசிக்காத உமா மகேஸ்வரி, இனியும் சுப்ரமணி உயிரோடு இருந்தால், தான் நினைத்தபடி மற்ற ஆண்களுடன் சந்தோஷமாக பழக முடியாது என முடிவெடுத்துள்ளார். இதையடுத்து உமாமகேஸ்வரி, அவருடைய ஆண் நண்பர்களான செங்காட்டூரைச் சேர்ந்த நாகராஜன், கண்ணன் ஆகியோர் மூலம் சுப்ரமணியை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டார். இத்திட்டத்துக்கு அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

 

அதன்படி, ஜூன் 11ம் தேதி இரவு அவர்கள் இருவரையும் வீட்டுக்கு வரவழைத்தார். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுப்ரமணியின் கை, கால்களை ஆண் நண்பர்கள் இறுக்கிப் பிடித்துக்கொள்ள, உமாமகேஸ்வரி சுப்ரமணியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

 

கொலை திட்டத்தை நிறைவேற்றியதும் ஆண் நண்பர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். ஆனால் உமா மகேஸ்வரி எதுவும் தெரியாததுபோல் அங்கே இருந்துள்ளார். பின்னர் அவரே தன் கணவர் மூச்சு பேச்சின்றி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

தலைமறைவான உமா மகேஸ்வரியின் ஆண் நண்பர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.