புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் கடந்த மாதம் 18 ந் தேதி குடிதண்ணீர் எடுக்க குளத்திற்கு சென்ற 13 வயது சிறுமி வீடு திரும்பவில்லை. தாய் மற்றும் சகோதரிகள் தேடிச் சென்றபோது அரை கி.மீ தூரத்திற்கு அந்தப்பக்கம் தைலமரக்காட்டில் கழுத்து நெறிக்கப்பட்டு வாய் பேச முடியாத நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தார். சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் 6 தனிப்படைகளை அமைத்து சிறுமி கொலைக்கு காரணமானவர்களை தேடுவதாக கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம் கொலையாளிகளை கைது செய்யும் வரை சிறுமியின் சடலத்தை வாங்க மாட்டோம் என்றனர். போலீசார் உத்தரவாதம் கொடுத்த பிறகு சடலம் வாங்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
மகளின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் தாய் இந்திரா காவல் நிலையத்தில் கொடுத்திருந்த நிலையில் சந்தேகப்பட்ட அனைவரையும் போலீசார் பிடித்து வந்து விசாரணை செய்தனர். ஆனாலும் மகள் இறந்த வருத்தம் இல்லாமல் சகசஜமாக இருந்த தந்தை பன்னீர் மீது உறவினர்கள் முதல் போலீசார் வரை அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.
அனைத்து சடங்குகளும் முடியும் வரை காத்திருந்த போலீசார் அதன் பிறகு பன்னீரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணைசெய்தபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. செல்வம் நிறைய சேர வேண்டும் என்றால் மகளை பலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை பெண் மந்திரவாதி வசந்தி சொன்னதால் தனது இரண்டாவது மனைவி மூக்காயி மற்றும் உறவினர் குமாருடன் இணைந்து மகளை கொல்ல திட்டமிட்டதுடன், முதல் நாள் இரவு பிடாரி கோயில் அருகில் உள்ள குளத்தில் பெண் மந்திரவாதி பூஜைகள் செய்துள்ளார். அவர்களுக்கு துணையாக முருகாயி என்ற பெண்ணும் இருந்துள்ளார்.
பூஜை நடந்து முடிந்த மறுநாள் குடிதண்ணீர் எடுக்க தனியாக சென்ற மகளை தைலமரக்காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற பன்னீர், குமார் மற்றும் தனது இரண்டாவது மனைவியுடன் இணைந்து சிறுமியின் கழுத்தை துண்டு மற்றும் சேலையால் நெறிக்க துடிதுடிக்க மயங்கி கீழே சரிந்த பிறகு மற்றவர்களை போகச் சொல்லிவிட்டு சந்தேகம் வராமல் இருக்க மயங்கிக் கிடந்த மகளின் உள்ளாடைகளை கழற்றிவிட்டு இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பிறகே தாய் இந்திரா தேடிச் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்தநிலையில் கடந்த 30 ந் தேதி தனது இரண்டாவது மனைவி மூக்காயியும் உடல்நலமின்றி இறந்துவிட்டார். இவ்வாறு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் அறிக்கை கொடுத்துள்ளனர். இதில் பன்னீர் மற்றும் குமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் கொலைக்கு பயன்படுத்திய துண்டு, சேலை, செல்போன்கள், மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பெண் மந்திரவாதி மற்றும் அவரது உதவியாளர் இருவரையும் தேடி வருகின்றனர்.
நரபலி பூஜை என்றால் பூஜை நடக்கும் போதோ அல்லது சிறுமியின் ரத்தத்தை வைத்தோதான் பூஜை செய்யப்படும். ஆனால் இங்கே பூஜை முதல் நாள் நடந்து முடிந்த பிறகு சிறுமி கழுத்து நெறிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் இருந்து ரத்தமும் எடுக்கப்படவில்லை. அப்பறம் எப்படி நரபலிக்காக சிறுமி கொல்லப்பட்டிருக்க முடியும். வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகம் உறவினர்களிடம் எழுந்துள்ளது.