Skip to main content

லாக்கரில் இருந்த 14 கிலோ தங்க நகை மாயம்... போலீசில் புகார்!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

incident in police

 

சென்னையில் உள்ள நகைக்கடை லாக்கரில் வைத்திருந்த 14 கிலோ தங்க நகை காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடை லாக்கரில் இருந்த 14 கிலோ தங்கத்தை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள் ராஜ்குமார், சுபாஷ் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். நகைக் கடையின் கதவு, லாக்கர் கதவு உடைக்கப்படாத நிலையில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 14 கிலோ தங்கம் காணாமல் போயிருப்பதால் தங்கத்தை நகைக் கடை ஊழியர்கள் திருடினார்களா அல்லது வேறு யாரேனும் திருடினார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்