Skip to main content

மனநலம் பாதித்த மகள்களால் கொலை செய்யப்பட்ட தாய்... பாளையங்கோட்டையில் பரபரப்பு!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

 incident in Palayankottai... police investigation

 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு மகள்கள் தாயை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் கோயில் பிச்சை. இவரது மனைவி உஷா (50). இந்த தம்பதிக்கு நீனா (23), ரீனா (20) என்ற இரு மகள்கள் உள்ளனர். கோயில் பிச்சை மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டைவிட்டுச் சென்ற நிலையில், உஷா அவரது மகள்களுடன் கே.டி.சி நகரில் வசித்துவந்தார். ஹிந்தி டியூசன் எடுத்துவந்த உஷா, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை சமாளித்து வந்துள்ளார். உஷாவின் மகள்களான நீனாவும், ரீனாவும் பட்டப்படிப்பு முடித்தவர்கள்.

 

 incident in Palayankottai... police investigation

 

சில நாட்களுக்கு முன்பு நீனா, ரீனா இருவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (20.07.2021) காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது, உஷா ரத்த வெள்ளத்தில் கொலையாகி கிடந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கதவை உடைத்து உள்ளே சென்றபோது உஷாவின் மகள்கள் நீனா, ரீனா கைகளில் ரத்த கறை இருந்தது. மகள்கள் இருவரும் தாய் உஷாவை கம்பு மற்றும் கத்தியைக் கொண்டு தாக்கி, கொலை செய்தது தெரியவந்தது. தாங்கள்தான் அம்மாவைக் கொன்றதாக இருவரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களை வெளியே அழைத்தபோது வெளியே வர மறுக்க, ஒருவழியாக பேசி, சமாதானப்படுத்தி இருவரும் வெளியே கொண்டுவரப்பட்டனர்.

 

இருவரும் தாயைக் கொன்றுவிட்டு பொம்மை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். அதேபோல் போலீசார் கூட்டி செல்கையில் மூத்த மகளான நீனா, தங்கைக்குப் பிஸ்கட் ஊட்டியுள்ளார். இந்த அளவிற்கு இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரையும் மனநல சிகிச்சைக்காக போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தாய் உஷாவின் உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்குப் போலீசார் அனுப்பிவைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட மகள்களால் தாய் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.