Skip to main content

தவறான உறவுக்கு தடையாக இருந்த மகன் கொலை-தாய் உட்பட மூவர் கைது!

Published on 07/09/2021 | Edited on 08/09/2021

 

incident in krishnagiri

 

தவறான உறவுக்குத் தடையாக இருந்த மகனைக் கொலை செய்த ஆண் நண்பனைக் காட்டிக்கொடுக்காத தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பர்கூர் தாலுகா அருகே உள்ள கொட்லெட்டி கிராமத்தில் உள்ளது மல்லேஸ்வரன் மலை அடிவாரம். கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி மல்லேஸ்வரன் மலைக்கு விறகு பொறுக்கச் சென்றவர்கள் அங்கு 10 வயது சிறுவன் காட்டில் சடலம் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக பர்கூர் டிஎஸ்பி தங்கவேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சிறுவனின் உடலில் பல இடங்களில் பிரம்பால் அடித்த காயங்கள் இருந்தது. அதே போல் தீ காயமும் இருந்தது. சிறுவனின் தலையில் மொட்டை அடிக்கப்பட்டு இருந்தது. இப்படிப் பல கொடுமைகள் செய்யப்பட்டு அந்த சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததை அடுத்து உடற்கூறு ஆய்விலும் இது கொலை என்பது உறுதியானது.

 

இது தொடர்பான சிறுவனின் புகைப்படம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பெங்களூரு பிடிஎம் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் தனது பேரனைக் காணவில்லை என்று ஆகஸ்டு 25ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளது தெரியவந்தது அவரிடம் பர்கூரில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சிறுவனின் புகைப்படத்தை போலீசார் காண்பித்துள்ளனர்.  அப்போது தான் தெரிந்தது அவர் தன்னுடைய பேரன் என்பது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சிறுவன் ராகுலை அவரது தாய் நதியாகவும் ஆண் நண்பர் சுனில் குமார் மற்றும் அவனின் மற்றொரு காதலி சிந்து ஆகியவர் அடித்துத் துன்புறுத்தியது தெரியவந்தது.

 

தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவைச் சேர்ந்த நதியாவுக்கு ரவி என்பவருடன் திருமணமாகி ராகுல் பிறந்த நிலையில், ராகுல் 3 மாத குழந்தையாக இருந்தபோதே நதியாவை விட்டு கணவர் ரவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குற்ற வழக்குகளில் தொடர்புடைய சுனில்குமார் என்பவருடன் நதியாவிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராகுல் வளர வளர தங்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதி சுனில்குமாரும் நதியாவும் பல ஆண்டுகள் கொடுமைகளைச் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நதியா வீட்டில் இல்லாதபோது சுனில்குமார் சிறுவனைத் தாக்கியுள்ளான். தாக்குதலில் ராகுல் இறந்துவிட சிந்துவுடன் சேர்ந்து கொட்லெட்டி மலைப் பகுதியில் உடலை வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை குறித்து நதியாவிடம் சுனில்குமார் தெரிவித்துள்ள நிலையில், சிறுவனின் பாட்டி பேரன் குறித்து விசாரித்தபோது மகன் கொலை செய்யப்பட்டதை நதியா மறைத்துள்ளார். ஆனால் இறுதியாக போலீசார் விசாரணையில் சுனில்குமார், நதியா, சிந்து ஆகியோர் சிக்கி தற்பொழுது கைதாகியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.