Skip to main content

பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் தந்தை அடித்துக் கொலை-இருவர் கைது!

Published on 25/04/2021 | Edited on 25/04/2021

 

incident in cuddalore

 

கடலூர் அருகே உள்ள தாழங்குடா செந்தாமரை நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் சுப்பிரமணியன்(63). மீனவரான இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகள் மட்டும் உள்ளார். இரண்டு மனைவிகளும் ஏற்கனவே இறந்து விட்டனர். தற்போது இரண்டாவது மனைவியின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது.

 

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி காலை தேவனாம்பட்டினத்திலுள்ள தனது முதல் மனைவியின் மகள் இந்துமதியை பார்ப்பதற்காக சுப்பிரமணியன் சென்றுள்ளார். அங்கு அவரிடம் இருந்து நிச்சயதார்த்த செலவுக்காக ரூபாய் 10 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு கிளம்பியுள்ளார். ஆனால் அன்றைய தினம் மாலை 3 மணியிலிருந்து சுப்பிரமணியனின் செல்ஃபோன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் சுப்பிரமணியனை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் தாழங்குடா கண்டக்காடு ஐயனார் கோவில் அருகே முகத்தில் காயங்களுடன் சுப்பிரமணியன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் வைத்திருந்த  10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் காணவில்லை.

 

இதுகுறித்து தகவலறிந்த கடலூர் டி.எஸ்.பி.சாந்தி மற்றும் தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் காதல் தகராறில் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கடலூர் முதுநகர் சுத்துகுளத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் குகன்(24) மற்றும் முருகன் மகன் ராஜசேகர்(27) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

 

குகன், ராஜசேகரின் சகோதரர் ஆவார். இதில் ராஜசேகர் சுப்பிரமணியன் மகளை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அதனால் ராஜசேகர் சுப்பிரமணியனிடம் அவரது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்க பேசுவதற்காக 22-ஆம் தேதி மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே வருமாறு அழைத்துள்ளார். அதையடுத்து சுப்பிரமணியமும் அங்கு சென்றுள்ளார். குகனும் ராஜசேகரும் காரில் சென்று சுப்பிரமணியனை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது ராஜசேகர் சுப்பிரமணியனிடம் அவரது பெண்ணைத் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார். 

 

incident in cuddalore

 

மேலும் தனது மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து வரும் 26-ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்ய உள்ளதாக கூறிய சுப்ரமணியன், " என் மகளை கொன்று போட்டாலும் போடுவேனே தவிர உனக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் குகன் உடன் சேர்ந்து சுப்பிரமணியனை துணியை முகத்தில் வைத்து அழுத்தி, அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அதையடுத்து ராஜசேகர், குகன் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.