Skip to main content

“சிஐடியுவைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் போராட்டம்” - விக்கிரமராஜா

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

 vickramarajah announcement If no action is taken against the CITU members, we will close the shops and engage in a struggle

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் இனி சிஐடியு தொழிலாளர்களுக்கு வியாபாரிகள் ஒருபோதும் பணி வழங்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா பேசுகையில், “வணிகர்கள் பேரமைப்பின் மூத்த உறுப்பினர் கந்தன் நேற்று (08 மார்ச்) திருச்சி பால்பண்ணை அருகில் புதிதாக திறக்கப்பட்ட லாரி புக்கிங் சென்டரில் நடந்த அடிதடியில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டார்.

 

சிஐடியுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கும்பல் அவரை மிக பலமாக தாக்கியதால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது குற்றப்பிரிவு 307 கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்றும் இதற்கு உறுதுணையாக இருந்த சிஐடியு மாவட்டச் செயலாளர் ராஜா மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த ராமர் ஆகிய இருவரும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

 

சிஐடியுவின் கட்சி வேட்பாளர்கள் எந்த இடத்தில் நிறுத்தப்பட்டாலும் அவர்களுக்கு வியாபாரிகள் ஆதரவு தரமாட்டோம், டெபாசிட் கூட வாங்க முடியாத அளவிற்கு நாங்கள் அவர்களுக்கு எதிராக தேர்தல் பணியாற்றுவோம் என்று கூறுகின்றனர். வியாபாரிகளைத் தாக்கிய சிஐடியு மாவட்டச் செயலாளர் ராஜா மற்றும் ராமர் மீது கொலை வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். அவர்களோடு சேர்ந்து வந்த 20க்கும் மேற்பட்ட சிஐடியு கும்பலில் 8 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தப்பிச் சென்ற கும்பலை கைது செய்வதோடு சிறையில் அடைக்கபபட்டுள்ளவர்கள் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைமை அலுவலகத்தில் நேரடியாக சென்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட தலைவர் ராஜா மற்றும் அக்கட்சியை சேர்ந்த ராமர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இனி சிஐடியுவைச் சேர்ந்த எந்த ஒரு தொழிலாளிகளுக்கும் திருச்சி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் ஒருபோதும் வேலைவாய்ப்பு தரப்போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையையும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. 

 

தேர்தல் ஆணையம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்திருந்தாலும், தற்போது தேர்தல் ஆணையத்தின் உதவியோடு ஆங்காங்கே பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர். அதில் அவர்கள் பறிமுதல் செய்யும் பணங்களெல்லாம் பெரும்பான்மையானவை வியாபாரிகள் உடையதாகவே இருக்கிறது. அதில் ஒரு துயர சம்பவம், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் கடலை வியாபாரி இடமிருந்து ஐந்து லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் ரூபாயில், அதிகாரிகள் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டு மீதமுள்ள 4 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மட்டும் கணக்கில் காட்டியுள்ளனர். எனவே தேர்தல் ஆணையம் எங்களை நேரில் அழைத்துப் பேச வேண்டும் என்றும், மேலும் வியாபாரிகள் இந்தத் தேர்தல் காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் முன்வைத்து இருக்கிறோம். தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க கூடாது என்பதில் மிகத் தெளிவாக இந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையத்திற்கு எங்களுடைய ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.