Skip to main content

''முதல்வர் அழைத்து பேசவில்லை என்றால் போராடுவோம்''-அரசு மருத்துவ துறை ஊழியர் சங்கம் அறிவிப்பு

Published on 24/09/2022 | Edited on 24/09/2022

 

"If the Chief Minister does not and talk, we will fight" - Government Medical Department Employees' Association announcement

 

தமிழ்நாடு அரசு மருத்துவ துறை ஊழியர் சங்கத்தை முதல்வர் அழைத்துப் பேசி ஊழியர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் இல்லையென்றால் அக்டோபர் ஒன்றுக்கு பிறகு கருப்பு பட்டை அணிந்து வேலை செய்வது உட்பட பல்வேறு போராட்டங்களை சங்கம் அறிவிக்கும் என தமிழ்நாடு அரசு மருத்துவ துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் ஜி. அன்பழகன் கூறியுள்ளார். சங்கத்தின் பொதுக்குழு ஈரோட்டில் 24 ந் தேதி  நடந்தது.  அதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் ஜி. அன்பழகன் பேசுகையில், 

 

"பத்தாண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட மருத்துவ துறையின் கீழ் 25 ஆயிரம் பணியாளர்கள் இருந்தனர். தற்போது 2000 நிரந்தர பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். 17 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. சுமார் 6000 பணியாளர்கள் தொகுப்பு ஊதியம் மற்றும் அவுட்சோர்சிங் முறையில் குறைந்த ஊதியத்தில் பணி புரிகின்றனர். பண்ணோக்கு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் குறைந்த ஊதியத்தில் பணி அமர்த்தப்படுவதால் பணி நிரந்தரம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். நிரந்தர பணியிடம் கேள்விக்குறியாகி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்யும் அவர்களுக்கு பணி நிரந்தரம் பதவி உயர்வு என்ற எதுவுமே வழங்கப்படவில்லை இதனால் பாதிக்கப்படுவது நோயாளிகள் மட்டுமே. பிரச்சனைகள் குறித்து என்ஜிஓ யூனியன் முன்னாள் தலைவர் சூரியமூர்த்தி பல போராட்டங்கள் நடத்தியுள்ளார். அந்த சங்கத்துடன் எங்கள் சங்கம் இணைந்தது என்பதால் முதலமைச்சர் எங்கள பிரச்சினை குறித்து அழைத்துப் பேச வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும். அறுவை அரங்கு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊழியர்களுக்கு எட்டு மணி நேர வேலையை உறுதி செய்திட வேண்டும். ஐந்து ஆண்டுக்கு மேல் பணியாற்றும் பல்நோக்கு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். துப்புரவுப் பணியாளர் பணி உயர்வு வழங்கிட வேண்டும். 4 ஆண்டுக்கு மேல் அனைத்து திட்ட ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளாகும்'' இவ்வாறு அவர் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.