Skip to main content

“சிறையில் இரவு 2.30 மணி வரை கூட படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்...” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

"I used to study even till 2.30 in the night in jail." - I.Periyaswamy

 

திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இலக்கிய களம் சார்பில் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும், புத்தகத் திருவிழா தொடர்பாக அதிக தொகை சேமிப்பு செய்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கேடயங்கள் மற்றும் திருக்குறள் ஒப்புவிப்பு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் வழங்கினார். 

 

அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த திமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் அமைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தி அனைத்து பொதுமக்களும் புத்தகம் படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். 

 

கடந்த 10 ஆண்டு காலமாக அதில் பெரிய அளவில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் விழாக்களில் பங்கேற்பவர்களுக்கு பரிசுப் பொருட்கள், சால்வை அணிவிப்பதை விட புத்தகங்களை நினைவுப் பரிசாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தனக்கு பரிசாக வந்த புத்தகங்கள் அனைத்தையும் பல்வேறு நூலகங்களுக்கு வழங்கியுள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தகத் திருவிழாக்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார். 

 

சென்னையில் மட்டும் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா அரசு சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட இப்புத்தகத் திருவிழா பொதுமக்களுக்கு மிகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. அதிக அளவிலான பொதுமக்கள் இங்கு வருகை தந்து பார்வையிட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் புத்தகங்கள் ரூ.1.5 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. புத்தகங்கள் படிப்பது ஒருவருடைய சிந்தைனைகளை தூண்டும். ஒருவருடைய வாழ்க்கைத் தரம், வாழ்க்கை அமைப்பு, வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகியவை நமக்கு கிடைக்கிறது. புத்தகம் படிப்பது நம் அறிவை கூர்மையாக்கும், சிந்தனையைத் தூண்டும், எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான சிந்தனைகளை உருவாக்கும். நமது சிந்தனைகள் வளர வேண்டுமானால் நாம் தொடர்ந்து புத்தகங்கள் படிக்க வேண்டும். 

 

இந்த புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு அரசு ஜவுளித்துறை ஆணையர் முனைவர் மா.வள்ளலார் எழுதிய ‘திண்டுக்கல்லில் எழுதிய வரலாறு’ என்ற நூல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் வரலாறு பற்றி புத்தகம் எழுதியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் வரலாற்று மாணவன்தான். வரலாற்றை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக ஏராளமான புத்தகங்களை படிக்க வேண்டும். நான் சிறைச்சாலையில் இருந்தபோது என்னை பார்க்க வருபவர்களிடம் புத்தகம் வாங்கி வருமாறு சொல்லி சுமார் 50 புத்தகங்கள் வரை எனக்கு கொண்டு வந்து கொடுத்தார்கள். புத்தகங்களை இரவு 2.30 மணி வரை கூட படிப்பதை வழக்கமாக அப்போது கொண்டிருந்தேன். அனைத்துப் புத்தகங்களும் நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளன. எனவே புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஒவ்வொருவரும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் புத்தகம் படிக்க வேண்டும். பொறுமையாக அமைதியாக படிக்க வேண்டும். புத்தகங்கள் படிப்பதன் மூலம் ஒவ்வொருவருடைய வாழ்க்கைப் பாதையும் நல்ல முறையில் அமையும்” எனக் கூறினார்.

 

இவ்விழாவில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, இலக்கிய களம் மனோகரன், இலக்கிய களம் செயலாளர் இராமமூர்த்தி, இலக்கிய களம் நிர்வாக செயலாளர் கண்ணன், திண்டுக்கல் இலக்கிய களம் பொருளாளர் மணிவண்ணன் உட்பட அதிகாரிகளும், கட்சி பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்