Skip to main content

''மிசாவில் இருந்த பொழுது நிகழ்ந்ததையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்''-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

"I think of all this that happened when I was in Misa" - Principal M.K. Stalin's speech

 

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மருத்துவ அறிவியல் மாநாட்டை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

 

நிகழ்வின் மேடையில் பேசிய முதல்வர், ''இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்டு திமுக ஆட்சி தமிழகத்தில் கலைக்கப்பட்டது. மிசா சட்டம் வந்தது. அந்த மிசா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருக்கக்கூடிய நிலை எனக்கு ஏற்பட்டது. ஒரு வருடம் சிறையில் இருந்தேன். அப்படி சிறையில் இருந்த பொழுது சைனஸ் பிரச்சனை வந்திருச்சு. அப்பொழுது ட்ரீட்மென்ட்க்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு என்ன அழைத்துக்கொண்டு போவாங்க போலீஸ் பாதுகாப்போடு. அப்படி அழைத்துக் கொண்டு போய் சிகிச்சை கொடுப்பார்கள்.

 

நான் சிறையில் இருந்து பொது மருத்துவமனைக்கு வரக்கூடிய செய்தி என்னுடைய தாய்க்கு தெரிந்து என்னுடைய தாய், தங்கை, தம்பி என்னுடைய வீட்டில் இருந்து பல பேர் புறப்பட்டு என்னை பார்க்க வருவார்கள். வரும்பொழுது கையில் சூப் எடுத்துட்டு வருவாங்க எனக்கு கொடுப்பதற்காக. சில நேரங்களில் சில காவலர்கள் தாராளமாக விட்டு விடுவார்கள். ஆனால் சில நேரங்களில் சில காவலர்கள் விட மாட்டார்கள் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்கள். அது அவர்களுடைய டூட்டி. அப்படிப்பட்ட நேரங்களில் டாக்டர் காமேஸ்வரனை பார்க்க அறைக்குப் போகும் பொழுது போலீசும் உள்ளே வருவார்கள். நான் பேஷண்ட்டை பார்க்க வேண்டும் நீங்கள் வெளியே இருங்கள் என்று போலீசை வெளியே நிற்கவைத்து விடுவார் மருத்துவர் காமேஸ்வரன். அங்கு அவருடைய பர்சனல் ரூம் இருக்கும். அங்கே என் அம்மா இருப்பார்கள். அவர்களை கூப்பிட்டு சூப்ப குடுங்க என்று சொல்வார். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். அப்படிப்பட்டவரின் புதல்வராக இருக்கக்கூடிய மோகன் காமேஸ்வரன் அவரது  தந்தை வழி நின்று, தந்தை போலவே தந்தை விட இன்னும் சிறப்பாக அந்த பணியில் ஈடுபட்டிருக்கிறார். மருத்துவத்துறையில் புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.