Skip to main content

"மகன் போல் உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்"- மூதாட்டிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல்!

Published on 03/10/2021 | Edited on 03/10/2021

 

"I look after you like a son" - Minister I. Periyasamy consolation to the grandmother!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செட்டியபட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி. விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், 01/10/2021 அன்று காலை 08.00 மணியளவில் குளித்துவிட்டு ஈரத்துண்டை கொடியில் காய வைக்க கயிற்றில் போட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மின்சாரம் தாக்கி அப்படியே நின்று உள்ளார். அவரை காப்பாற்ற வந்த அவரது இரண்டு மகன்கள் விஜய கணபதி மற்றும் சந்தோஷ் ஆகியோரும் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டனர்.

 

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் முருகன் மற்றும் அவரது மனைவி சூர்யா, அவர்களை காப்பாற்ற வந்த போது அவர்களும் மின்சாரம் தாக்கித் தூக்கி வீசப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது, அந்த கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இது குறித்து தகவலறிந்த தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சரும், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஐ.பெரியசாமி நேற்று (02/10/2021) இரவு 08.00 மணியளவில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல செட்டியப்பட்டிக்கு வந்தார்.

 

அங்கு அவர் கையைப் பிடித்த படி திருப்பதியின் தாயார் கண்ணம்மாள் மகனையும், பேரன்களையும் இழந்து விட்டேன் என உருக்கமாக, கண்ணீருடன் பேசினார். அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, " நான் மகன் போல் உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். கணவரையும், மகன்களையும் இழந்த வசந்தாவிடம் மகன்கள் படித்து கல்லூரிக்குச் செல்லும் போது, அவர்களை இழந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி விட்டது. உங்களுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு சார்பாக நிச்சயம் செய்வேன்" என்று உறுதியளித்தார். 

 

அத்துடன், உடனடியாக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாவை அழைத்து அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன் பின்பு மின்சாரத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற போய் காயங்களுடன் உயிர் தப்பிய முருன் வீட்டுக்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி, அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

பின்னர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும், அந்த குடும்பத்திற்கு நிரந்தர வாழ்வாதாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.