Skip to main content

“நான் குடிக்கல... உங்க மிஷின் தப்பா காட்டுது...” - வைரலான போலீஸ் - இளைஞர் வாக்குவாதம்!

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

 "I don't drink.. Your machine is showing fault..." -Viral Police - Youth Argument!

 

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்ய, “எனக்கு குடிப்பழக்கமே இல்லையே… போங்க சார்.. உங்க மிஷின் தப்பு சார்… நீங்க என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்  ப்ளட் டெஸ்ட் எடுங்க..” என போலீஸ்காரரிடம் இளைஞர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

அந்த வீடியோவானது சென்னை தேனாம்பேட்டையில் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் இரவு ரோந்துப் பணியில் இருந்த சட்டம்-ஒழுங்கு எஸ்.ஐ. இளங்கோவன், ஒரு காரை தணிக்கை செய்யும்போது அதனை ஓட்டி வந்த தீபக்கை, பிரீத் அனலைசர் கருவியை வைத்து ஊதச் செய்திருக்கிறார். அப்போது 45 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாகக்  காட்டியது. தீபக்கோ, மதுப்பழக்கமே எனக்கு கிடையாது என வாக்குவாதம் செய்தார்.  வேண்டுமானால் என்னை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பரிசோதனை செய்யுங்கள். அப்போது, எனது ரத்தத்தில் ஆல்கஹால் இருப்பதாகக் காட்டினால் நான் சம்மதிக்கிறேன் என்கிறார்.

 

எஸ்.ஐ. இளங்கோவனோ, வழக்கு போடுவது மட்டுமே எங்கள்  வேலை, நான் தவறு செய்யவில்லை என்பதை நீங்களே நிரூபியுங்கள் என எதிர்வாதம் செய்கிறார்.  இதையடுத்து, வேறு ஒரு பிரீத் அனலைசர் கருவி மூலம் 2 முறை சோதனை செய்யப்பட்டது. இருமுறையும் ஜீரோ பெர்சன்டேஜ் காட்டியது. இதனால், வழக்கு பதிவு செய்யாமல் அவரை அனுப்பி வைத்துவிட்டனர் போலீசார்.    இதனிடையே, தீபக்குடன் வந்த நண்பர் இந்த வாக்குவாதத்தை செல்போனில் பதிவு செய்து ஊடகங்களுக்கு கொடுத்ததால் பழுதான கருவியை வைத்து போலீசார் வழக்குப் பதிவு செய்வதாக செய்திகள் வெளியாகின.

 

இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் காவல் ஆணையர் கபில் குமார் சரத்கர் செய்தியாளர்களிடம்  பேசியபோது,  “போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறை உதவியுடன் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்து வருகிறோம். ஆனால் இதுவரை யாரும் எங்களுக்கு இப்படி ஒரு புகார் அளித்ததில்லை. நாங்கள் சோதனை செய்யும் கருவிகள் அனைத்தும் நல்ல பராமரிப்பில் இருக்கிறது. இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் அதிகாரிகள் முன்கூட்டியே அவைகளைச் சரிபார்த்த பின்பே உபயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். 383 கருவிகள் எங்களிடம் உள்ளது. இவையனைத்தும் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டது.  ஒரு கருவியின் விலை 40 ஆயிரம் ரூபாய் ஆகும்.  பொது மக்களுக்கு சிறிது நேரம் சிரமம் இருந்தாலும், விபத்துகள் ஏற்படாமல் இருக்க இதுபோன்ற சோதனைகளில் ஈடுபடுவது முக்கியம்” எனக் குறிப்பிட்டார்.

 

சம்பந்தப்பட்ட போலீஸ்காரரைத் தொடர்பு கொண்டோம்.

“நாங்கள் சோதனையில் ஈடுபடும்போது, எல்லோருக்கும் பிரீத் அனலைசர் கருவியைப் பயன்படுத்தமாட்டோம். குடித்துவிட்டு வருபவர்கள், நம்மைக் கண்டாலே தப்பிச் செல்வதற்குத்தான் பார்ப்பார்கள். ஒரு சிலர் வாயை ஊதமாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள். நாங்கள் அருகே சென்று பேச்சுக் கொடுப்போம். அப்போது, மது வாடை அடித்துவிடும். அப்படியான நபர்களுக்குத்தான் ப்ரீத் அனலைசர் கொண்டு சோதனை நடத்துவோம்.

 

அன்றைய தினம் சம்பந்தப்பட்ட காரை நிறுத்தினோம். கார் டோரை திறந்ததுமே மது வாடை அடித்தது. அந்தக் காரில் மேலும் 2 பேர் இருந்தனர். ஒருவேளை அவர்கள் குடித்திருந்திருக்கலாம். ஏசி கார் என்பதால், அந்த ஸ்மெல் வெளியே வந்திருக்கலாம். அதனால், 45 பர்சன்ட் கருவியில் காட்டி இருக்கலாம். அவங்க கூட இருந்தவர்  நான் ஆர்கியூ பண்றதை வீடியோ பதிவு செய்தார். நாங்களும் எங்க தரப்புக்காக வீடியோ பதிவு செய்து வைத்திருக்கிறோம். இதில் எங்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை” எனத் தெரிவித்தார்.

 

 "I don't drink.. Your machine is showing fault..." -Viral Police - Youth Argument!

 

‘பக்கத்தில் இருந்தவர் குடித்திருந்தாலும், ப்ரீத் அனலைசர் கருவி இப்படி காட்டுமா?’ என நமக்குத் தெரிந்த போக்குவரத்து காவலர் ஒருவரிடம் கேட்டோம். “அப்படி எல்லாம் நடக்காது சார்… நல்லா வாயை வச்சு 2 அல்லது 3 முறை ஊதினால்தான் எவ்வளவு ஆல்கஹால் கன்டென்ட் இருக்கு என்பதைக் காட்டும். 10 நிமிடத்திற்கு முன்னாடி குடித்திருந்தார் என்றால் 100 அல்லது 150 பெர்சன்டேஜ் காட்டும். 3 மணி நேரத்திற்கு முன்னாடி குடித்திருந்தால், அளவு குறைவாகக் காட்டும்.  அதாவது 50 அல்லது 60 பெர்சன்டேஜ் காட்டும். 40 பெர்சன்டேஜுக்கு மேல வந்தால் கேஸ் போடுவோம். 10 மணிநேரத்திற்கு முன்னாடி குடித்திருந்தால் 5 அல்லது 10 பெர்சன்ட் காட்டும்.  அவர்களும் சார். நான் நேற்று குடித்தேன் என்று உண்மையை ஒத்துக் கொள்வார்கள். நீங்கள் சொன்னது மாதிரி பக்கத்தில் இருந்தவன் குடித்திருந்தால் கருவியில் பதிவாகாது.” என்றார்.

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டிஜிபி சைலேந்திரபாபு, “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை அதி நவீன கருவி மூலம் கண்காணிக்கிறோம். 6 மணி நேரத்திற்கு முன்பு அல்லது நேற்றைய தினம் மது அருந்தி இருந்தால் கூட இயந்திரம் மூலம் கண்டுபிடித்து விடலாம். மூன்று மாதங்களுக்கு முன் வாங்கிய இயந்திரத்தைத்தான் காவல்துறையினர் பயன்படுத்தி வருகிறார்கள். புகார் மீது விசாரணை நடத்தப்படும். இயந்திரத்தில் தவறு இருந்தால் நிச்சயம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

 

காவல்துறை நல்லபடியாக விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் தினமும் இதுபோன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.