Skip to main content

'தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறேன்' - இளையராஜா குறித்த கேள்விக்கு வைரமுத்து பதில்!

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

 'I am out of communication'-Vairamuthu's answer to the question about Laiyaraja!

 

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கியது தொடர்பான கேள்விக்கு பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து பதில் அளிக்க மறுத்துள்ளார்

 

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கவிஞர் வைரமுத்து, ''கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்க வேண்டும் என்று பல இயக்குநர்கள் என்னிடம் கேட்டார்கள். தொலைக்காட்சி தொடராக இயக்கலாமா என்று பாரதிராஜா என்னை கேட்டார். எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. ஏனென்றால் ஒரு நாவல் படமாக்கப்படுகின்றபோது இரண்டு விதமான விளைவுகள் ஏற்படும். ஒன்று அந்த நாவல் இருப்பதைவிட சிறப்பாக எடுத்துக்காட்டுவது. அல்லது நாவலில் இருப்பதை விட அது குறைவாக மாறிவிடுவது.

 

உதாரணமாக 'பார்த்திபன் கனவு' என்ற கல்கியின் நாவல் நாவலாக இருந்ததை விட படமாக வந்த பொழுது அந்தப் படைப்பின் உயரம் சற்று குறைந்து போனது. ஆனால் 'ஏழை படும்பாடு' என்று தமிழில் வந்த நாவல் படமாக்கப்பட்ட போது மாபெரும் வெற்றி பெற்றது. தில்லானா மோகனாம்பாள் வெற்றி பெற்றது. தில்லானா மோகனாம்பாள், ஏழை படும்பாடு என்ற உயரத்தில் கள்ளிக்காட்டு இதிகாசமும் படைக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். காலம் கனிய வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார்.

 

அப்பொழுது இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு 'நான் இந்த கேள்விக்கு தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறேன்' என கூறி கேள்விக்கு பதில் சொல்ல மறுத்தார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” -  கவிஞர் வைரமுத்து

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

Vairamuthu has demanded that education should be transferred to state list

 

நீட் விலக்கை வலியுறுத்தி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க, கையெழுத்தியக்கத்தை இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் துவக்கி வைத்தார். அதன் பணிகள் தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வரும் நிலையில், இன்று கவிஞர் வைரமுத்து நீட் தேர்வுக்கு எதிராக கையொப்பமிட்டுள்ளார்.  

 

அதற்கு முன்பு பேசிய அவர், நீட் என்பது மாணவர்களுக்கு எதிரானது; சமூக நீதிக்கு எதிரானது என்ற கருத்து நகரம் முதல் கிராமம் வரை பரவி இருக்கிறது. நீட் என்பது மாணவர்களுக்கு இழைக்கப்படுகிற கல்வி அநீதி அல்லது எதிர்கால அநீதி என்பதில் உணர்ந்தவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஏனென்றால் நீட் தேர்வில் எழுதுகிற மாணவனுக்கு எழுதும் தேர்வில் ஒரு  சமநிலை இல்லை; மாணவர்கள் தேர்வு எழுதி எழுதியே தங்களது வாழ்வில் பாதியை கரைத்து விடுகிறார்கள் என்பதை   இந்த சமூகம் நினைவில் கொள்ள வேண்டும். அதனால் நீட்டுக்கு எதிராக; நீட் விலக்கிற்காக நாங்கள் இங்கே கையெழுத்திடுகிறோம்” என்றார். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

 

“‘நீட் விலக்கு நம் இலக்கு’
இயக்கத்தில் நானும் 
கையொப்பமிட்டேன்.

 

“நீட் என்பது 
கல்விபேதமுள்ள தேசத்தில் 
ஒரு சமூக அநீதி என்றேன். 

 

நீட்தேர்வு 
மருத்துவத்தில் 
சேர்த்துவிடுவதற்கு மாறாகச்
சிலரை
மரணத்தில் சேர்த்துவிடுவதை 
அனுமதிக்க முடியாது என்றேன்

 

நீட் விலக்கு மசோதாவில் 
குடியரசுத் தலைவர் 
கையொப்பமிட வேண்டும் மற்றும் 
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு 
மாற்ற வேண்டும்" என்று 
கோரிக்கை வைத்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

"பெண்ணுக்குச் சரிசமமான இடம் தந்ததுதான் தமிழ் சினிமாவின் பொற்காலம்" - வைரமுத்து

 

vairamuthu speech about womens importance in tamil cinema

 

மேப்பிள் லீஃப் ப்ரொடக்‌ஷன் தயாரிப்பில், எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'கட்டில்'. இந்த படத்திற்கு ஸ்ரீ காந்த் தேவா இசையமைத்துள்ளார். வைரமுத்து, மதன் கார்க்கி ஆகியோர் பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

 

நிகழ்ச்சியில் வைரமுத்து பேசுகையில், "கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் தான் புதிய கலைஞர்கள் நமக்கு கிடைப்பார்கள். பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகிறது, துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ்பாபு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார். சிறு படங்கள் தான் நம்மைச் சிறகடித்துப் பறக்கவைக்கும் நம் சிந்தனையை வளர்க்கும். பழைய படங்களின் போஸ்டர் பார்த்தால் அதில் பெண்களும் முக்கியமாக இடம் பெற்றிருப்பார்கள். ஆனால் இப்போது சினிமாக்களில் பெண்களின் படங்களைப் பார்க்க முடிகிறதா? பெண்ணுக்குச் சரிசமமான இடம் தந்த சினிமா தான் தமிழ் சினிமாவின் பொற்காலம், அந்த பொற்காலத்தை தன் கட்டில் மூலம் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார் கணேஷ்பாபு . 

 

இது மாதிரியான சின்னப் படங்கள் ஜெயிப்பது தான் மக்களுக்கு மகிழ்வைத் தரும்.  என்போல் சமூக செயல்பாட்டாளர்கள் அதைத்தான் ஆசைப்படுகிறோம். கண்ணதாசன், வாலி இருந்தபோது அவர்களோடு போட்டி போட்டு நான் நின்றேன். அவர்களை ஜெயிக்க முடியாது எனத் தெரியும், ஆனால் அவர்களோடு நானும் இருக்கிறேன் என நின்றேன், அது மட்டும் போதுமா? இப்போது நான் மதன் கார்க்கியோடு போட்டி போடுகிறேன். அவரை ஆஸ்திரேலியாவிற்கு படிக்க அனுப்பினேன், விஞ்ஞானம் படித்துவிட்டு வந்து பேராசிரியர் ஆனார். ஆனால், எனக்குப் போட்டியாக வருவார் என நினைக்கவில்லை. இந்தப் படத்தில் அருமையான வரிகள் தந்துள்ளார். அவருக்கு இந்தப் படத்திற்குத் தேசிய விருது கிடைக்க வாழ்த்துகள். கணேஷ்பாபு நினைவுகளின் வலியை இப்படம் மூலம் பதிவு செய்துள்ளார் அவர் வெற்றி பெற வாழ்த்துகள்" என்றார்.