Skip to main content

"அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் கூற தயாராக இல்லை.." - மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

dmk



கொங்கு மண்டலம் எனப்படுகிற மேற்கு மண்டலத்தின் கிழக்கு வாசலாக உள்ள கரூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 1,2 ஆகிய இரு நாள் பயணமும், ஏறக்குறைய ஒரு லட்சம் மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வும் அடுத்து 3 ந் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் மாநாடு பிரமாண்ட விழாவாக நடந்தது, அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியும், நடைபெற்று முடிந்த பணிகளை திறந்து வைத்தும், தொடர்ந்து செய்ய வேண்டிய மக்கள் நல திட்டங்களைத் தொடங்கி வைப்பது என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

 

அதன் தொடர்ச்சியாக முதல்வராக பொறுப்பேற்றபின் முதன் முதலாக கரூருக்கு 1 ந் தேதி மாலை வந்தார்.

 

திருச்சி விமான நிலையத்திலிருந்து கரூர் வரும்வரை இருபுறமும் மக்கள் காத்திருந்து வரவேற்பு கொடுத்தனர். இரவு 8 மணிக்கு கரூர் பயணியர் விடுதிக்கு வந்தபோது அங்கு அமைச்சர் செந்தில்பாலாஜியால் ஏற்பாடு செய்யப்பட்ட கரூர் மாவட்ட,நகர தொழில் முனைவோர்கள் குறிப்பாக ஜவுளி உற்பத்தியாளர்கள் காத்திருந்தனர். ஜவுளி தொழிலில் ஏற்பட்ட தேக்கத்திற்கு என்ன காரணம்? அதை முன்னேற்ற செய்ய என்ன செய்ய வேண்டும் என ஒரு மணி நேரத்திற்கு மேல் அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு தொழில் முனைவோர்களையும், இந்த தொழிலை நம்பி வாழும் தொழிலாளர் குடும்பங்களையும் தி.மு.க. அரசு காப்பாற்றும் என்ற உறுதியை முதல்வர் வழங்கினர்.

 

DMK

 

2 ந் தேதி காலை 85 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கரூர் நகரம் முழுக்க மக்கள் கடல்போல் திரண்டிருந்தனர். விழா பந்தலில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த பிரமாண்டத்தை ஏற்பாடு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜியை தட்டிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் மேடை ஏறினார் முதல்வர் ஸ்டாலின்.

 

"ஒருபுறம் அமராவதி மறுபுறம் காவேரி என கரூரில் இரண்டு நதிகள் ஓடுவதுபோல தமிழக முதல்வர் தனது இரண்டு திருக்கரங்களால் கரூரை காக்கிறார்"  என கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "திராவிட பேரரசே"... என்ற கவிதையை வாசித்தார். அதை ரசித்த முதல்வர்,

 

பிறகு பேசுகையில்,

DMK

 

"கரூர் மாவட்டத்திற்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம். இங்கிருப்போரின் முகங்களில் திமுக ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக அமைந்துள்ளதை தெளிவாக அறிய முடிகிறது. இதனால்தான் வீண் விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை. இப்போது எனக்கு மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் ஒரு சில அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் கூற தயாராக இல்லை. அதற்கு நேரமும் இல்லை.

 

தந்தை பெரியார் கூறுவார், மானத்தை பற்றி கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட போராடலாம். ஆனால் மானத்தை பற்றி கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் நாம் போராடவே முடியாது என அடிக்கடி சொல்வார். அப்படி மானத்தைப் பற்றி கவலைப்படாத மனிதர்கள் வைக்கும் விமர்சனத்தை பற்றி நான் மதிக்க விரும்பவில்லை.

 

dmk

 

ஊடக துறையினரிடம் நான் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன், திமுக ஆட்சியானது எப்படி செயல்படுகிறது என்பதை இது போன்ற மனிதர்கள் முன்னால் மைக்கை நீட்டாமல் தமிழ்நாட்டு மக்களிடம் கேளுங்கள். பெண்களிடம் கேளுங்கள், இருளர்கள், நரிக்குறவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என விளிம்பு நிலைக்கு கீழே இருக்கக்கூடிய மக்களிடம் இந்த ஆட்சியைப் பற்றி கேளுங்கள். இந்த ஆட்சியில் சமூக நீதி எந்த அளவுக்கு போற்றி பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து சமூக நீதிக்காக போராடுபவர்களிடம் கேளுங்கள், அவர்கள் இந்த ஆட்சியின் சாதனை பற்றி சொல்வார்கள். நியாயமான கோரிக்கையை யார் வைத்தாலும் அதை நிறைவேற்றித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைவருடைய கருத்தையும் கேட்டு, அதனைச் செயல்படுத்தி தருபவனாகத்தான் நான் இருக்கிறேனே தவிர, நான் நினைப்பது மட்டும் தான் நடக்க வேண்டும் என நான் நினைப்பவன்  அல்ல.

 

அப்படி மக்களிடம் கருத்துக்களை பெற்று ஊடகங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தாங்களும் இருக்கிறோம் என்பதை தங்களின் இருப்பை காட்டிக் கொள்வதற்காக நாள்தோறும் மைக் முன்னால் வாந்தி எடுப்பவர்கள் அளிக்கும் பேட்டிகளுக்கும் நான் பதில் சொல்வதற்கு என்றைக்கும் தயாராக இல்லை.

 

DMK

 

திமுக ஆட்சியை விமர்சிப்பதன் மூலம் என்னை எதிர்த்து கருத்துச் சொல்வதன் மூலம் பிரபலம் அடையலாம் என நினைப்பவர்களைப் பார்த்து நான் வருத்தப்படுகிறேன். கோடிக்கணக்கான தமிழக மக்களின் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என விரும்புகிறவன் நான், அதுவும் சாதாரண விளக்காக அல்ல, அது அறிவு விளக்குகளாக, அன்பு விளக்குகளாக, சேவை விளக்குகளாக, மக்களுக்கு பயன் தரும் விளக்குகளாக அமைய வேண்டும் என நினைக்கின்றேன். உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு முதல்வர் நாற்காலியை தமிழக மக்கள் எனக்கு வழங்கி இருக்க காரணம் என்ன? மக்களுக்கு இந்த ஸ்டாலின் நல்லது செய்வான் என்ற நம்பிக்கையில்தான், அந்த நம்பிக்கையை நான் எந்நாளும் காப்பாற்றுவேன்.

 

 

DMK

 

கரூர் என்றாலே பிரம்மாண்டம தான். அமைச்சர் செந்தில்பாலாஜியால் தான் இந்த பிரம்மாண்டத்தை முறியடிக்கும் மற்றொரு பிரமாண்டத்தை செய்ய முடியும். கடல் இல்லா கரூரில் மக்கள் கடலை ஏற்படுத்திவிட்டார் செந்தில் பாலாஜி.." என உள்ளப் பூரிப்புடன் கூறி மீண்டும் மக்கள் கடலில் நீந்தி நாமக்கல் சென்றார் முதல்வர். அங்கும் திரும்பிய திசையெல்லாம் ஆண்கள், பெண்கள், என மலர்ந்த முகங்கள்தான்.

 

பா.ஜ.க. அண்ணாமலையை அடையாளப்படுத்தாமல் செய்த முதல்வரின் விமர்சனமும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உழைப்பை முதல்வர் பாராட்டியதும் கரூர் மக்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.