Skip to main content

"உலகத் தரத்திலான உயர்கல்வி பெறவே நான் முதல்வன் திட்டம்” - அமைச்சர் சி.வெ.கணேசன் 

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

"I am the first project to get world class higher education" - Minister C.V.Ganesan

 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 'கல்லூரி கனவு' எனும் பிளஸ் டூ மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கடலூர் கம்மியம்பேட்டை புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

 

இதில் அமைச்சர் கணேசன் பேசுகையில், "மாணவர்களின் வாழ்வில் பன்னிரண்டாம் வகுப்புக்குப் பின் அவர்கள் படிக்கும் உயர்கல்வி அவர்களது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. தமிழக முதலமைச்சரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு, பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தமிழக மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு உள்ள வாய்ப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல்வேறு துறைகள் குறித்தும், வங்கி மற்றும் வங்கி கடன் பெறுதல் உள்ளிட்ட அறிவிப்பினை அனைவரும் பெறும் வகையிலும் தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெறும் வகையில் நான் முதல்வன் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 'நான் முதல்வன்' இணைய முகப்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், நிறுவனங்கள் மூலமாக தரக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் வழங்கும் உதவித் தொகைகள் பற்றிய விவரங்களும் நான் முதல்வன் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.


மாணவர்களுக்கு இந்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதலமைச்சரால் நான் முதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.