Skip to main content

''உங்களால் மெய் சிலிர்க்கிறேன் ரத்னா'' - பெண் கவுன்சிலரை பாராட்டிய கனிமொழி எம்.பி

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

சென்னையில் இரவு பகல் பாராமல் மழை வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் கவுன்சிலரை பாராட்டியிருக்கிறார் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. அந்தப் பெண் கவுன்சிலருக்கு அவர் சார்ந்த வார்டு மக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தபடி இருக்கிறார்கள்.

 

சென்னையில் கடந்த சில நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது. திமுக அரசும் சென்னை மாநகராட்சியும் எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளிலும் சாலைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை. பெய்து கொண்டிருக்கும் மழை அரை மணி நேரம் நின்றாலும் போதும், சாலைகளில் இருந்த தண்ணீர் வழிந்து ஓடியது. இதனால் மக்களின் அவஸ்தைகள் பெருமளவு  குறைந்திருந்தது. அதேசமயம், மிகவும் தாழ்வான பகுதிகள், மெட்ரோ பணிகள் நடந்து வரும் பகுதிகள், வட சென்னை ஏரியாக்கள் எனக் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வெள்ளம்போல் காட்சி தந்தது சென்னை.

 

அந்த வெள்ளத்தையும் பம்ப் செட்டுகள் மூலம் அகற்ற தீவிரப் பணியில் ஈடுபட்டிருந்தனர் மாநகராட்சி ஊழியர்கள். இருப்பினும் சில பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகளோ, ஊழியர்களோ எட்டி கூடப் பார்க்கவில்லை. சென்னை விருகம்பாக்கம் 128-வது வார்டு பகுதிகள் இந்த மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஏரியா மக்கள் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட ஏரியா வாசிகள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தபடி இருந்தனர். ஆனாலும் யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

 

இந்நிலையில், ஏரியா திமுக பெண் கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரனிடம் முறையிட்டனர். தகவல் கிடைத்ததுமே திமுகவினரை அழைத்துக்கொண்டு ஏரியாவுக்குள் சென்றார். மழை வெள்ளத்தால் அவதிப்பட்ட மக்களைச் சந்தித்து,  “கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். தேங்கிய தண்ணீரை அகற்றிவிடுகிறோம்'' என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு, விடிய விடிய அந்தப் பகுதிகளிலேயே இருந்து தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டார் கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரன். மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 

கவுன்சிலர் ரத்னாவின் பணிகளைக் கண்டு ஏரியா பெண்மணிகள் பலரும் சோசியல் மீடியாக்களில் இதனைப் பதிவு செய்துள்ளனர். பாராட்டுகளும் வாழ்த்துகளும் ரத்னாவுக்கு தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் இது வைரல் ஆக, இதனையறிந்த திமுக பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., “பெருமையாக இருக்கிறது ரத்னா” என்று ஆங்கிலத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அத்துடன் ரத்னாவை தொடர்பு கொண்டு, “உங்களின் மக்கள் பணி அறிந்து மெய்சிலிர்க்கிறேன். நெருக்கடியான சூழலில் மக்களுக்காகக் களத்தில் இறங்கிச் செய்யும்  சேவைதான் உன்னதமானது. வாழ்த்துகள்’’ என்று பாராட்டியிருக்கிறார் கனிமொழி எம்.பி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.