Skip to main content

மனைவியை கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரண்!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

HUSBAND AND WIFE INCIDENT TENKASI DISTRICT POLICE INVESTIGATION

 

தென்காசி மாவட்டத்தின் குருவிகுளம் அருகிலுள்ள அத்திப்பட்டி கிராமத்தின் கே.கே.நகரைச் சேர்ந்த கருப்பசாமியின் மகன் சின்ன முனியசாமி (வயது 36) என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கவிதாவிற்கும் (வயது 32) கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுக்கு முகேஷ் (வயது 9) என்ற மகன், நவசியா(வயது 6) என்ற மகள் என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

சின்ன முனியசாமி கோவில்பட்டியிலுள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்வதால், வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்பவர். ஆரம்ப காலங்களில் தம்பதியரின் வாழ்க்கை சீராகத்தான் போயிருக்கிறது. மேலும் கவிதா அத்திப்பட்டிப் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு சமூக தணிக்கை ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்திருக்கிறார். 

 

அத்துடன், மகளிர் சுய உதவிக்குழுத் தலைவியாகவும் இருக்கிறார். கணவன் வெளியூர் வேலை என்பதால், மனைவி கவிதாவோ பணி நிமித்தம் செல்போனில் பேசுவது வழக்கம். அதுசமயம் பணியிடத்திலுள்ள ஒருவரை அடிக்கடி தொடர்பு கொண்டு செல்போனில் அதிக நேரம் பேசுவாராம். அதேபோல், கணவன் சின்ன முனியசாமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பிருப்பது மனைவிக்கு அரசல் புரசலாகத் தெரிய வந்திருக்கிறது.

 

இதனிடையே நேற்று வேலை முடிந்து சின்ன முனியசாமி ஊருக்கு வந்துபோது மனைவி கவிதா, தன் செல்போனில்  யாரிடமோ அதிக நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். ஏற்கனவே, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

 

இதனால் ஆத்திரமான கவிதா, தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு அதே ஊரிலுள்ள தன் தாய்வீட்டுக்குக் கிளம்பியிருக்கிறார். அப்போது மனைவியைத் தடுத்த சின்ன முனியசாமி, கவிதாவை அடித்துத் கிழே தள்ளி அருகில் கிடந்த கல்லைத் தூக்கி மனைவியின் தலை மீது போட்டிருக்கிறார். 

 

படுகாயத்தில் தலைநசுங்கிய கவிதாவின் உயிர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பிரிந்திருக்கிறது. மனைவியைக் கொலை செய்த சின்ன முனியசாமி, நேராக குருவிகுளம் காவல்நிலையம் சென்று சரணடைந்திருக்கிறார். அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மேல் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.