Skip to main content

“இரக்கப்பட்டு உதவி செஞ்சோம், ஏமாத்திட்டு போய்ட்டாங்க” - 500க்கும் மேற்பட்ட மக்கள் குமுறல்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

husband and wife absconded after buying crores of money name of more than 500 people financial institutions
கணவன் - மனைவி

 

நாகை அருகே நுண்கடன் நிதி நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்டவர்களின் பெயரில் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு கணவன், மனைவி தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த ஒரத்தூர் ஊராட்சி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் காந்தி. இவரது மனைவி வித்யா. வித்யா அருகில் உள்ள நரியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். காந்தி பொரவாச்சேரியில் மரப்பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். வித்யா கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள பெண்களிடம், எங்களுக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவ செலவு செய்ய வேண்டும் என்றும் புது பட்டறை துவங்கப்போகிறோம் என்றும் பல்வேறு காரணங்களைக் கூறி உங்கள் பெயரில் நுண்கடன் நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுங்கள். அந்த கடனை நான் கட்டி விடுகிறேன் என்று சொல்லிக் கேட்டுள்ளார்.

 

அவர்களின் உடல்நிலையைக் கண்டு இரக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் கடன் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதேபோல் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் ஒரத்தூர், அகர ஒரத்தூர், வேர்க்குடி, பாப்பாகோவில், நிர்த்தனமங்கலம், நரியங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் 500க்கும் மேற்பட்டவர்களின் பெயரில் அரேஸ், பிங்கர், ஈஷாப், லெஷ்மி கடாட்ஷம், கிராமின் கோட்டா, உதயம், ஜோதி, எக்விடாஸ், பெல் ஸ்டார், சமஸ்தானம், பியூஷன், கிராம விடியல் உள்ளிட்ட பல்வேறு நுண்கடன் நிறுவனங்களில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

 

வித்யா அரசுப் பள்ளியில் சத்துணவுப் பணியாளராக இருந்ததால் அவர்களும் நம்பி தங்களது பெயரில் 5, 6 நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுத்துள்ளனர். மேலும் அப்பகுதி பெண்களிடம் இருந்து ரேசன் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, ஏடிஎம் கார்டு அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு குழுத் தலைவியாகவும் செயல்பட்டு அவர்களுக்கு தெரியாமலேயே துணைக் கடன் வாங்கியும் மோசடி செய்துள்ளனர். 

 

husband and wife absconded after buying crores of money name of more than 500 people financial institutions

 

இந்த நிலையில் காந்தியும் அவரது மனைவி வித்யாவும் கடந்த வாரம் ஊருக்கு சென்றவர்கள் திரும்ப ஊருக்கு வரவில்லை. அப்போது அந்த வாரத்தில் நுண்கடன் நிறுவனங்களுக்கு பணம் கட்டாததால் அதன் ஊழியர்கள் பணம் வாங்கிக் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு வந்து பணம் கட்டச் சொல்லியுள்ளனர். அப்போது அந்த பெண்கள் வித்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது செல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் ஒவ்வொரு பெண்களும் வித்யா வீட்டிற்கு வர, அவர்கள் கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்களுடன் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. மேலும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் 500க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றி ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காந்தி, வித்யா வீட்டின் முன்பு திரண்ட கிராம மக்கள் மண்ணை வாரி இறைத்தும் சாபம் விட்டும் அழுது புலம்பியதோடு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மோசடி செய்த கணவன், மனைவி மீது புகார் அளித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.