Skip to main content

சொல் பேச்சு கேட்காததால் இரண்டாவது மனைவி அடித்து கொலை; கொல்லிமலையில் அருகே  பரபரப்பு

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

husbanad and wife incident kollimalai in namakkal district police investigation

 

கொல்லிமலை அருகே, சொல் பேச்சு கேட்காத இரண்டாவது மனைவியை உருட்டுக் கட்டையால் 
அடித்துக் கொலை செய்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்தனர்.  

 

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வளப்பூர் நாடு அரசப்பட்டியைச் சேர்ந்தவர் கொங்கன் (வயது 60). விவசாயி. இவருக்கு இரண்டு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசிக்கின்றனர்.  

 

கொங்கனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர், தனது தோட்டத்தில் விளையும் காய்கறிகள், பழங்களை முள்ளுக்குறிச்சி சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார்.  

 

அவ்வாறு சென்று வந்தபோது, ராசிபுரம் அருகே உள்ள மலையம்பட்டியைச் சேர்ந்த மணி என்கிற தங்கமணி (வயது 50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் கணவரை இழந்து தனியாக வசித்து வந்ததால், அவரை திருமணம் செய்து கொள்ள கொங்கன் முடிவு செய்தார். அதன்படி, தங்கமணியை கொங்கன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

 

கொல்லிமலை அரசப்பட்டியில் இருந்து விளை பொருள்களை விற்பனைக்குக் கொண்டு செல்லும் போதெல்லாம் தங்கமணி, ராசிபுரத்திலேயே ஒரு வார காலம் தங்கியிருந்து விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  

 

இதையறிந்த கொங்கன், சந்தைக்குப் போனால் விளை பொருள்களை விற்பனை செய்து விட்டு  உடனடியாக ஊர் திரும்ப வேண்டும் என்று பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் தங்கமணி, அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

 

ஆக. 18- ஆம் தேதி இரவும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கொங்கன், உருட்டுக் கட்டையால் தங்கமணியை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார்.  தகவல் அறிந்த வாழவந்திநாடு காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று  சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூராய்வுக்காக சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதற்கிடையே, உள்ளூரில் ஒருவருடைய வீட்டில் பதுங்கி இருந்த கொங்கனை காவல்துறையினர் கைது செய்தனர். சொல் பேச்சு கேட்காமல் நடந்து கொண்டதால் மனைவியைக் கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் தங்கமணி, ராசிபுரத்தில் ஒரு வார காலம் தங்குவதை வழக்கமாக வைத்திருந்ததுதான் கொலைக்குக் காரணமா? அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைகள்; புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த பரிதாபம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Husband lost their life over wife passed away

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆடுதுறை ரவி(58). இவர் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு பூவரசன்(25) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில், மூத்த மகன் பூவரசனும் கந்தநேரி அடுத்த கழனிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வயா(20) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று மாலை ஐஸ்வர்யா தோழியின் நிச்சயதார்த்த விழா பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அதற்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு தன் கணவரிடத்தில் ஐஸ்வர்யா வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

பூவரசனும் அவரின் தாயாரை பள்ளிகொண்டா பகுதியில் நடைபெறும் வாரச் சந்தைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதாகவும் அதற்காக கணவன் மனைவி இடையே சிறிய அளவிலான வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பூவரசன் தன் தாயை அழைத்துக் கொண்டு பள்ளிகொண்டாவில் உள்ள வாரச்சந்தைக்கு சென்றுள்ளார். பெண் தோழியின் நிச்சயதார்த்த விழாவிற்கு அழைத்துச் செல்லாததால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டினுள்ளே படுக்கையறையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.

சந்தைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய பூவரசன், ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து உடனடியாக ஐஸ்வர்யாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்பே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கணவர், இன்று அதிகாலை மருத்துவமனை வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவரிடம் காட்டிய போது அவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட சிறு தகராற்றால், கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கணவன் மனைவிக்கிடையே தகராறு; மன வேதனையில் மாமியார் எடுத்த விபரீத முடிவு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Woman lost their life in grief

ஈரோடு சி.என்.சி காலேஜ் அருகே கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மேகலா (49). கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் ஜனனி. மேகலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜனனிக்கு திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தாய் மேகலா வீட்டிற்கு வந்துவிட்டார் ஜனனி. தனது மகள் கணவருடன் கோபித்துக் கொண்டு வந்ததால் மேகலா கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், கேரளாவிற்கு ஒரு விசேஷத்திற்காக ஜனனி சென்றுவிட்டார். வீட்டிலிருந்த மேகலா திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மேகலா தங்கி இருக்கும் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மேகலா கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், முன்பே மேகலா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.