Skip to main content

விடுதி மாணவ மாணவிகளுக்கு வாய்மொழி உத்தரவு

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
ddd

 

 

தமிழகம் முழுவதும் 7ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் விடுதிகளில் தங்கி பயிலக் கூடிய மாணவ மாணவிகளுக்கு ஒரு அறையில் மூன்று அல்லது நான்கு மாணவர்களும் மாணவிகளும் தங்கும் நிலை ஏற்படுவதால் ஒரு அறைக்கு ஒரே ஒரு மாணவர் அல்லது ஒரே ஒரு மாணவியோ மட்டுமே தங்க வைக்க வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. 

 

இந்த உத்தரவால் கல்லூரி நிர்வாகங்கள் மாணவ மாணவிகளிடம் இருந்து விடுதிக் கட்டணத்தை பெற முடியாமல் அதனால் மிகுந்த நஷ்டம் அடையும் நிலை ஏற்படும் என்பதால் விடுதியில் தங்காமல் தினம்தோறும் வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்து செல்லக்கூடிய வெளிப்புற மாணவர்களை மட்டும் கல்லூரிகளுக்கு வர கல்லூரி நிர்வாகம் அனுமதித்துள்ளது.

 

மேலும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வாய்மொழி உத்தரவாக நீங்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை கவனித்துக் கொள்ளுங்கள் என்று தமிழகத்தில் உள்ள கல்லூரி நிறுவனங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

Bengaluru Announcement of holiday for schools and colleges tomorrow
கோப்புப்படம்

 

த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என டெல்லியில் நேற்று முன்தினம் (26.09.2023) நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பல்வேறு விவசாய சங்கத்தினர் மண்டியா, மைசூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

 

மேலும் இதற்கு வலுசேர்க்கும் வகையில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழகத்திற்குக் காவிரியில் இருந்து நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசைக் கண்டித்தும் நாளை (29.09.2023) அன்று கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் இவரின் அறிவிப்புக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

 

இந்நிலையில் கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர‌க் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நாளை டெல்லியில்  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

“தோழி விடுதிகள்; முன்னேறும் மகளிர்க்கான முகவரி” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

thozhi Hostels An Address to Advancing Women Chief Minister M.K.Stalin

 

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் மூலம் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 9 நகரங்களில் நவீன வசதிகளுடன் பெண்கள் தங்குவதற்காக ‘தோழி’ விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.

 

இந்த விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி, பார்க்கிங் வசதி, பயோ-மெட்ரிக் வசதி, இலவச வை- பை, பொழுதுபோக்கு அம்சங்கள், அயனிங் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தோழி விடுதி குறித்த முழுமையான விவரங்களை www.tnwwhcl.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். விடுதி அறைகளில் தனியாகவும், இருவர், நான்கு பேர்,  ஆறு பேர் என அறையை பகிர்ந்து கொள்ளும் முறையும் உள்ளது.

 

இந்நிலையில் தோழி விடுதிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், “தோழி விடுதிகள் - இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி. மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது. டாக்டர் நடேசனாரின் 'திராவிடர் இல்லம்' போல், திராவிட மாடல் ஆட்சியின் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைகொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.