Skip to main content

தூத்துக்குடியில் ஹாங்காங் சரக்கு கப்பல் நிறுத்தி வைப்பு... கொரோனா வைரஸ் தாக்கத்தால் தீவிர சோதனை!!

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

சீனாவில் பிறப்பிடமான கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டிற்கு வரும் சர்வதேச விமானங்களை சோதனைக்குப் பின்பே அனுமதிக்கின்றன. சில நாடுகள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்ச்சைக்குரிய நாட்டு விமானங்களை அனுமதிப்பதில்லை. ஏனெனில் நூற்றுக்கணக்கில் தொடங்கி இது வரையிலும் மொத்தமாக இரண்டாயிரம் வரை கொரோனா பலி உயர்ந்து விட்டது. சீனா உட்பட பல்வேறு நாடுகளில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையே அச்சத்திற்கு அடிப்படை.

 

Hong Kong cargo ship stop at Tuticorin port ...


விமான நிலையம் மட்டுமல்ல. நாடுகளின் துறைமுகத்திலும் இதே கதைதான். தமிழகத்தின் தென் மாவட்டத்தில் முக்கிய துறைமுகமான தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு சரக்கு கப்பல்கள் செல்வதோடு, இறக்குமதியின் பொருட்டு பல நாட்டுக் கப்பல்களின் வருகையும் அதிகரிக்கின்றன. கடந்த மாதம், சரக்கு ஏற்றிக் கொண்டு வந்த விவகாரத்திற்குரிய சீன நாட்டுக்கப்பலின் ஊழியர்களை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என சோதனை செய்யாமல் பெர்த்திற்குள் அனுமதிக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. இந்த விஷயம் பரபரப்பானதால் சோதனைக்கு பின்னர் வைரஸ் தாக்கமில்லை என்று கண்டறியப்பட்டதால் தான் சீன சரக்கு கப்பல் உள்ளே அனுமதிக்கப்பட்டது. என்று ஃபோர்ட் டிரஸ்ட்டின் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இதனிடையே தற்போது ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட எம்.டி. ஹன்னா என்ற ஆயில் டேங்க்கர் கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்துள்ளது.

 

Hong Kong cargo ship stop at Tuticorin port ...

 

இந்தோனேசியாவின் பாடம் துறைமுகத்திலிருந்து வந்த இந்தக் கப்பலில், மாலுமிகள் உட்பட 21 பேர்கள் உள்ளனர். கொண்டு வந்த சரக்கான பாமாயிலை இறக்க துறைமுகத்தின் 2 வது பெர்த்திற்கு வர அனுமதி கேட்ட அக்கப்பல் 26ம் தேதி முதலே துறைமுகத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டது. காரணம் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகமே. இந்நிலையில் துறைமுக மருத்துவக்குழுவினர் அக்கப்பலிலுள்ளவர்களை மருத்துவ ஆய்வு மேற் கொண்டனர். அவர்களுக்கு கொரோனோ தொற்று அரிகுறி இல்லை என்று உறுதியாகத் தெரிந்த பிறகே 8 ஆயிரம் மெட்ரிக் டன் எடை கொண்ட பாமாயிலை இறக்க அனுமதிக்கப்பட்டது.

இது மட்டுமல்ல வெளி நாடுகளிலிருந்து வரும் எந்தக் கப்பலானாலும் சரி, அவைகள் கொரோனோ வைரஸ் தொற்று சோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட ஹாங்காங் கப்பலின் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற பிறகே அனுமதி தரப்பட்டது. அதே சமயம் அந்தச் சரக்குகள் முழுமையாக இறக்கும் வரையிலும் கப்பலின் ஊழியர்கள் யாரும் துறைமுகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை என்ற தடையும் விதிக்கப்பட்டது. என்கிறார் துறைமுகத்தின் துணை மக்கள் தொடர்பு அதிகாரியான முருகன்.

இங்கு மட்டுமல்ல, கொரோனோ வைரஸ் தாக்கத்தின் வீரிய வீச்சு, உலக நாடுகளின் அனைத்துப் பிரிவையும் அலர்ட் செய்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.