Skip to main content

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையேற்றதால் வேதனை அடையும் ஹாலோ பிளாக் நிறுவனங்கள்!!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
Hollow block companies suffer due to rising prices of construction materials including cement

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும் சிமெண்ட்டால் ஆன கற்கள் ஜன்னல்கள், ஜாடிகள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன.  தற்போது கரோனா தொற்று பேரிடர் காலத்தினால் வேலை செய்ய முடியாமல், வருமானம் ஈட்ட முடியாமல் தவித்துவந்த உற்பத்தியாளர்களுக்கும் அவர்களைச் சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் பேரதிர்வாக கட்டுமான மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் செய்வதறியாமல் திகைத்திருக்கின்றனர்.

 

ஹாலோ பிளாக் உற்பத்திக்குத் தேவைப்படும் முக்கிய மூலப் பொருட்களில் ஒன்றான சிமெண்ட், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  இருந்த விலையைவிட 80 ரூபாய் அதிகரித்து 460 ஆகவும், 6 ஆயிரத்திற்கு விற்ற 100 கிலோ கம்பி 7 ஆயிரம் ஆகவும், 8,500க்கு விற்ற 3 யூனிட் ஜல்லி 9,500 ஆகவும் விலை உயர்ந்துள்ளதால் சிறு, குறு தொழிலாக செய்துவந்த ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இத்தொழிலைக் கைவிட்டுவிட்டதாக தெரிவிக்கின்றனர். மேலும், சில உற்பத்தியாளர்களின் கடன் சுமை, குடும்பத்தின் நிலைமை, இத்தொழிலை சார்ந்து வாழும் தொழிலாளர்களது குடும்பத்தின் நலனைக் கருதி, கடந்த ஒருமாத காலமாக பல்வேறு பண நெருக்கடியில் சிமெண்ட் பொருட்களைத் தயாரித்துவந்தாலும், மூலப்பொருட்களின் விலையேற்றத்தை சரிக்கட்டும் நோக்கத்தில், தயாரிக்கப்படும் சிமெண்ட் கற்களை மூன்று முதல் நான்கு ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு அப்பொருளை வாங்க வரும் ஏழை-எளிய மக்களான கிராமப்புற வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்ய முற்படும்போது, விலையேற்றம் குறித்து தெரிவித்தாலும், அப்பொருட்களை விற்பதற்குள் கடும் வாக்குவாதம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

 

அவர்களிடம் கட்டுமான மூலப்பொருட்களின் விலையேற்றத்தைப் பற்றி எடுத்துரைத்து விற்பனை செய்து வருவதுடன் வேதனையும் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த ஒருமாத காலத்தில் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தால், வீடுகள் கட்ட வேண்டுமென்று நினைக்கும், கிராமப்புற ஏழை, எளிய மக்களின் கனவு நனவாகாமல்தான் போகும். பண்டைய காலங்களில் முன்னோர்கள் பயன்படுத்திய களிமண்ணால் ஆன வீடுகள், புளிக்கரைசலைப் பயன்படுத்தி மூங்கில் தட்டில் அமைத்த சுவர்களை எழுப்பி வாழலாம் என்று பொதுமக்களின் மனநிலை மாறக்கூடும் என்று தெரிவிக்கின்றனர். தங்கம் விலைபோல் உயர்ந்துவரும் கட்டுமானப் விளைபொருட்களின் விலையேற்றத்தை தமிழ்நாடு அரசு சரி செய்யுமா? செய்யாதா? என பல்வேறு கேள்விகளுடன் சிமெண்ட் கற்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் புதிதாக வீடு கட்டுபவர்கள் என பல்வேறு தரப்பினர் மன வேதனை அடைவதாக தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.