Skip to main content

விருத்தகிரீஸ்வரர் கோயில் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், கட்டடங்கள் அகற்றம்... அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை! 

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

VIRUDHACHALAM TEMPLES CUDDALORE DISTRICT OFFICERS AND POLICE

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு தினமும் 4 கால பூஜை மற்றும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றுவருகிறது. மேலும், மாசிமகம் கோயிலின் ஆண்டுத் திருவிழாவாக 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். இதனால் கோயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தரிசனம் செய்வதற்கு இட வசதியின்றி பக்தர்கள் அவதிப்படுவதுடன், கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தவும் இடவசதியின்றி சிரமப்படுகின்றனர். 

 

அதேசமயம் கோயிலின் நான்கு வீதிகள் மற்றும் கோயில் முன்வாயில் பகுதியில் கிழக்கு ராஜகோபுரம் எதிரே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்றுமாறு பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் கடந்த 1993ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 5 தேர்களும் எரிந்து சாம்பலாகின. இதனால் தேர் நிறுத்தும் இடம் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக அருகில் உள்ள 32 கடைகளை அகற்றுவதற்கு கோயில் நிர்வாகம் கடந்த 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணைய நீதிமன்றம் சென்னை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணைய நீதிமன்றம் விழுப்புரம் ஆகிய 2 நீதிமன்றங்களும் கோயில் எதிரே தேரடி அருகிலுள்ள 32 கடைகளையும் அகற்ற உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. 

VIRUDHACHALAM TEMPLES CUDDALORE DISTRICT OFFICERS AND POLICE

 

அதன் அடிப்படையில் நேற்று (15.07.2021) 32 கடைகளை அகற்றுவதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதில் 9 கடைகள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், மீதமுள்ள 23 கடைகளை அகற்றும் பணியில் இந்து சமய அறநிலைத்துறை கடலூர் உதவி ஆணையர் பரணிதரன் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆக்கிரமிப்பாளர்களிடம், தாங்களாக கடைகளைக் காலி செய்துகொள்ள வேண்டும் என எச்சரித்தும், அவர்கள் காலி செய்யாமல் அலட்சியம் காட்டிவந்தனர். மேலும் காலி செய்வதற்கு சில நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டனர். ஏற்கனவே பலமுறை அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்தும் காலி செய்யவில்லை. அதனால் இந்தமுறை கால அவகாசம் எதுவும் கிடையாது என கூறி அதிரடியாக கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 

அப்போது கடையின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் டி.எஸ்.பி மோகன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் கடைகள் இடித்து அகற்றப்பட்டன. விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார், கோயில் செயல் அலுவலர்கள் விருத்தாசலம் முத்துராஜா, மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் மாலா மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களின் செயல் அலுவலர்கள் முன்னிலையில் கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது. 

 

உதவி ஆணையர் பரணிதரன் செய்தியாளர்களிடம்  கூறுகையில், "கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்குப் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் அவர்கள் கடைகளைக் காலி செய்ய மறுத்ததன் பேரில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதன்படி வழக்கு கோயிலுக்கு சாதகமாக 32 கடைகளை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் மற்றும் இணை ஆணையர் ஆகியோர் ஒத்துழைப்போடு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.  

VIRUDHACHALAM TEMPLES CUDDALORE DISTRICT OFFICERS AND POLICE

 

மேலும், படிப்படியாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபடும். தற்போது வழக்குகள் அனைத்தும் முடிவான பின்பு மீதமுள்ள கடைகள் அகற்றப்படும். அதுபோல் கோயிலின் நுழைவாயில் முன்பு அசைவ உணவுகள் தயாரிக்கும் ஓட்டல்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கின் முடிவு வந்த பிறகு அந்த நடவடிக்கையில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.