Skip to main content

கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் சூடம் ஏற்றி போராட்டம்! 

Published on 25/06/2021 | Edited on 25/06/2021
Hindu party involved in struggle to opening of temples
                                                             மாதிரி படம்

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வைகுண்டவாசப் பெருமாள் கோவில், சிவலோகநாதர் செல்வாம்பிகை கோவில், திருமுண்டீச்சரம் ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களின் முன்பு  இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ் அப்பு தலைமையில் சூடம் ஏற்றி சாமிகும்பிடும் போராட்டம் பூட்டப்பட்ட கோவில்கள் முன்பு நடத்தினார்கள். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர். தமிழக அரசு கரோனா பரவல் காரணமாக சுமார் இரண்டு மாதங்களாக பல்வேறு தடை உத்தரவை பிறப்பித்தது. அதன்படி மக்கள் கடைபிடித்து வந்தனர். கடந்த இரண்டு வாரங்களாக தடையுத்தரவுகள் தளர்த்தப்பட்டு பொதுமக்கள் சுமுக வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். கரோனா பரவல் குறைந்து வருகிறது.

 

இதன் காரணமாக மூடப்பட்டிருந்த வணிக நிறுவனங்கள் கடைகள் ஆகியவற்றை திறக்க அரசு உத்தரவிட்டது. மேலும் கடந்த வாரம் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு உத்தரவிட்டது. தற்போது டாஸ்மாக் சரக்கு வாங்க மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காற்றில் பறக்க விட்டுவிட்டு சரக்கு வாங்கி செல்கின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 50% பயணிகளுடன் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் புறநகர் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் பொதுமக்கள் தங்கள் கவலைகளைப் போக்க, தங்கள் பிரச்சனைகளை, குடும்பச் சிக்கல்களை ஆலயங்களுக்கு சென்று இறைவனிடம் முறையிட்டு தரிசனம் செய்து வருவார்கள். அவர்களுக்கு இறைவன் குடியிருக்கும் ஆலயங்களே புகலிடமாக உள்ளன. அப்படிப்பட்ட ஆலயங்கள் மூடப்பட்டு கிடக்கிறது.

 

பக்தர்கள் மனதில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் கோவில்களைத் திறந்து பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இறைவனை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி கோயில்களின் சூடம் ஏற்றி வழிபடும் போராட்டம் நடத்தினார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக கூடும் வணிக நிறுவனங்களை டாஸ்மாக் கடைகளை திறக்கும் போது ஏன் கோயில்களை மட்டும் பூட்டு போட்டு அடைத்து வைக்க வேண்டும். உயிரை குடிக்கும் டாஸ்மாக் கடையை திறந்து வைக்கலாம் எங்கள் உயிரைக் காக்கும் இறைவன் ஆலயத்தை மூடி வைக்க வேண்டுமா? உடனடியாக கோவில்களை பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறக்க வேண்டும் என்று இந்து முன்னணியினரும் பொதுமக்களும் இப்போராட்டத்தின் மூலம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினார்கள். இந்த வழிபடும் போராட்டத்தில் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர்கள் ஜெயச்சந்திரன், அழகேசன், விக்னேஷ் மற்றும் கண்ணன், தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது