Skip to main content

இயக்குநர் ஷங்கர் மீதுள்ள வழக்கை தள்ளுபடி செய்த  உயர் நீதிமன்றம்!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

High Court dismisses case against director Shankar

 

இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைக்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர் கமல் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் தயாராகிவருகிறது. இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

 

இந்த வழக்கில் ஷங்கர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்துவிட்டார். இதை எதிர்த்து லைகா தரப்பில் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. இந்த வழக்கானது இன்று (08.07.2021) மீண்டும் தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, லைக்கா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்று கூறி, லைக்கா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

''மணல் கொள்ளையை நீர்வளத்துறை அதிகாரிகளே ஒப்புக்கொண்டனர்''-அமலாக்கத்துறை தகவல்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

"Water Resources Department Officials Admit Sand Robbery" - Enforcement Department Information

 

தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரிகளில் பண பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி அதற்கான விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அண்மையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு அளித்திருந்தது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த வழக்கின் வாதங்களில் அமலாக்கத்துறை பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளது. குறிப்பாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி என்பவர் நிர்பந்திப்பதாக அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  

 

nn

 

இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் பொழுது நீர்வளத்துறை அதிகாரிகள் கொடுத்த வாக்குமூலங்களை பிரமாண பத்திரமாக உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அந்த பிரமாணப் பத்திரத்தில் சட்டவிரோதமாக மிகப்பெரிய அளவில் மணல் அள்ளப்பட்டதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், நீர்வளத் துறைக்கு இதன் மூலம் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வாக்குமூலத்தில் அதிகாரிகள்  கூறியதாக தெரிவித்துள்ளனர்.

 

உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுகளுக்கு கட்டுப்படுவதை தவிர நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு வேறு வழியில்லை எனவும், சட்டவிரோத மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பு என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக  அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வாதத்தை வைத்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசின் வாதங்கள் நிறைவடைந்த பிறகு நாளை தீர்ப்பு வழங்கப்படும் என வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

யுபிஎஸ்சி தேர்வை மாநில மொழிகளில் நடத்தக் கோரி மனு

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Demanding to conduct UPSC examination in state languages

 

குடிமைப் பணிக்கான தேர்வை மாநில மொழிகளில் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கு யுபிஎஸ்சி சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்விற்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் இது குறித்து தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இதனால் மாநில மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. வேலைவாய்ப்பில் சம வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. எனவே அரசியலமைப்பு சட்டத்தில் 8வது அட்டவணையில் உள்ளதுபோல் அனைத்து மொழிகளிலும் தேர்வை நடத்த வேண்டும்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்