Skip to main content

தமிழகத்தில் பல இடங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
Heavy rain lashed many places in Tamil Nadu

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

இது வட கிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதாவது இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி செல்லும். அதே சமயம் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டை நோக்கி வராது என்றாலும் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, ராஜகம்பீரம், சிப்காட், முத்தனேந்தல், மூங்கில் ஊரணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பொழிந்து வருகிறது, அதேபோல கரூர் மாவட்டம் வெங்கமேடு, காந்திகிராமம், வையாபுரி நகர், தான்தோன்றி மலை உள்ளிட்ட பகுதிகளிலும் சந்தைப்பேட்டை, ஆவியூர், சைலோம், குன்னத்தூர், வடக்கு நெமிலி, கலர்புரம் ஆகிய இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது.

தேனி மாவட்டம் மற்றும் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. வடுகப்பட்டி, மேல்மங்கலம், தேவநானப்பட்டி, லட்சுமிபுரம், சோத்துப்பாறை, கும்பக்கரை, ஆண்டிப்பட்டி, வருஷநாடு, கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது. விழுப்புரத்தில் கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர், மணம்பூண்டி, தேவனூர், வடகரை, தாழையனூர், சித்தலிங்கமடம், சி.மெய்யூர் உள்ளிட்ட இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவளம், கொட்டாரம், சுசீந்திரம், மருங்கூர், தேரூர் உள்ள பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘மிகக் கனமழைக்கு வாய்ப்பு’ - ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Chance of very heavy rain Orange Alert issued by Meteorological Dept

தமிழ்நாட்டின் 2 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அன்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இன்றும்(22.06.2024) நாளையும்(23.06.2024) மிகக் கனமழை பெய்யக்கூடும். எனவே இவ்விரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும். மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

Next Story

சென்னையில் பரவலாக மழை

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
nn

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. சென்னை தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அயனாவரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், அனகாபுத்தூர், மதுரவாயில், போரூர், வளசரவாக்கம், குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதியில் பலத்த மழை பொழிந்து வருகிறது.