Heavy rain in Chennai

தமிழகத்தில்29 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை பரவலாக மழைக்கான வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், மதுரை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, சேலம், தென்காசி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Advertisment

இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. ஈக்காட்டுதாங்கல், மதுரவாயல், ராமாபுரம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. பூந்தமல்லி, திருவேற்காடு, வானகரம், செம்பரம்பாக்கம், குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

Advertisment