Skip to main content

மாணவர்களின் மடிக்கணினியோடு தப்ப முயன்ற தலைமை ஆசிரியை! மடக்கிப் பிடித்த பெற்றோர்!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

The head teacher who tried to escape with the students' laptops! Folding parents!

 

மயிலாடுதுறை அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரைக் கண்டித்து ஆசிரியர்கள் ஒருபுறம் உள்ளிருப்பு போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். மறுபுறம் தலைமையாசிரியர் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 36 மடிக்கணினிகளுடன் பள்ளி வளாகத்திலிருந்து தப்ப முயன்றபோது அங்கிருந்தவர்கள் சுற்றிவளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். 34 நான்கு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். கடந்த 7ஆம் தேதி தலைமை ஆசிரியர் சித்ரா, மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் செந்தில் என்பவரை அவமானப்படுத்தியதால், பள்ளியிலேயே தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவருகிறார்.

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியின் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மனு ஒன்றையும் அளித்தனர். ஆனால் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளோ புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம்கடத்திவந்தனர். அதே நேரம் பள்ளியின்  தலைமை ஆசிரியர்  சித்ராவோ, ‘எனக்கு இருக்குற செல்வாக்குக்கு அவங்க எம்மாத்திரம்’ என சக ஆசிரியை இரண்டு பேரிடம் கூறிவிட்டு வழக்கம்போல மீண்டும் இன்று (11.12.2021) பள்ளிக்கு வந்தார்.

 

The head teacher who tried to escape with the students' laptops! Folding parents!

 

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் 20க்கும் மேற்பட்டோர் வருகை பதிவேட்டில் கையெழுத்து போடாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும்போதே தலைமை ஆசிரியை சித்ரா தனது காரில் பள்ளியைவிட்டு வெளியேற முயற்சித்து காரில் விரைந்தார். தலைமை ஆசிரியர் அவசர அவசரமாக வெளியேறியதைக் கண்டு சந்தேகமடைந்த பெற்றோர்களும், ஆசிரியர் சங்கத்தினரும் காரை வழிமறித்து ஆசிரியையிடம் பேசிக்கொண்டிருக்கையில் காரில், கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணிணி தென்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது காரை முழுமையாக சோதித்ததில் 36 மடிக்கணினிகள் இருந்ததைக் கண்டு பொதுமக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.

 

இதையடுத்து, பள்ளி வளாகத்தின் வாயில் கதவைப் பூட்டு போட்டு மூடிவிட்டு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பாலையூர் காவல் ஆய்வாளர் விசித்ராமேரி உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தலைமை ஆசிரியர் மீது விசாரணை மேற்கொண்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற உத்தரவாதம் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலைந்து சென்றனர்.

 

The head teacher who tried to escape with the students' laptops! Folding parents!

 

தலைமையாசிரியை சித்ராவிடம் இதுகுறித்து கேட்டோம், அவர் பதில்கூற மறுத்துவிட்டார். அவருக்கு நெருக்கமான ஆசிரியை ஒருவர் கூறுகையில், "பிரச்சனை வந்துவிட்டது, லேப்டாப் இங்கிருந்தால் ஏதாவது பிரச்சனை வந்துவிடும், அதோடு அதற்கான பொறுப்பு தலைமை ஆசிரியர் என்பதால் பாதுகாப்புக்காகவே அதை எடுத்துச் சென்றிருக்கிறார்" என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Mayiladuthurai Congress candidate announcement!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை நேற்று (25.03.2024) காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. அதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த அறிவிப்பில் தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிட உள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் ஆர். சுதா. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறார். 

Next Story

மயிலாடுதுறை தொகுதி யாருக்கு?; மல்லுக்கட்டும் கதர்சட்டை பிரமுகர்கள்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Mayiladuthurai constituency for whom
எஸ்.எம்.பி. துரைவேலன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் மயிலாடுதுறை உள்பட 2 தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமல் கட்சியின் தேசிய தலைமை தவித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் ஒரு வருடத்திற்கு மேலாக களப்பணி செய்து தி.மு.க. கூட்டணிக்கு சாதகமான சூழலை உருவாக்கி வைத்துள்ளார்.

இந்த நிலையில் தான் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கியுள்ள நிலையில் அந்த சீட்டுக்காக திருவாரூர் மாவட்டத் தலைவர் மன்னார்குடி எஸ்.எம்.பி. துரைவேலன் பீல்டு அரசியலில் உள்ள எனக்கு தான் சீட்டு வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு 200 க்கு மேற்பட்ட கதர் சட்டைக்காரர்களை அழைத்துச் சென்று விருப்ப மனு கொடுத்துவிட்டு காத்திருக்கிறார். அதே சீட்டுக்காக ராகுல்காந்தி உள்பட டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ள மயிலாடுதுறையில் இருந்து டெல்லியில் இடம்பெயர்ந்துள்ள சிஇஓ பிரவின் சக்கரவர்த்தி டெல்லி அரசியல் மூலமாகவே சீட்டுக்காக போராடிவருகிறார்.

ராகுல்காந்திக்கு நெருக்கமானவராக உள்ளதாக கூறி சீட்டு வாங்கிவிட பிரவின் சக்கரவர்த்தி முயன்று வரும் நிலை அறிந்து திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலனின் மகன் விமான உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான பிரவின் தனது தந்தையை டெல்லிக்கே அழைத்துச் சென்று சில நாட்கள் முகாமிட்டு கார்க்கே உள்ளிட்ட தேசிய தலைவர்களை சந்தித்து உள்ளூரிலேயே இருந்து உள்ளூர் மக்களுடன் பழகி மக்களுடன் மக்களாக உள்ள எங்க அப்பாவுக்கு சீட்டு கொடுங்கள். வெற்றி பெற்று இந்திய கூட்டணியின் கரத்தை பலப்படுத்துவோம் என்று நம்பிக்கையாக கூறியுள்ளார்.

Mayiladuthurai constituency for whom
பிரவின் சக்கரவர்த்தி

இதனால் டெல்லியில் உள்ளவருக்கு சீட்டு கொடுப்பதா இல்லை தொகுதியிலேயே இருந்து லோக்கல் அரசியல் செய்பவருக்கு சீட்டு ஒதுக்குவதா என்று கதர்சட்டை தேசிய தலைமைக்கே குழப்பம் நீடிப்பதால் நேற்றைய வேட்பாளர் பட்டியலில் மயிலாடுதுறை விடுபட்டுள்ளது. இதற்கிடையில் மயிலாடுதுறையை எனக்கு கொடுங்கள் என்று திருநாவுக்கரசரும் டெல்லியில் முகாமிட்டுள்ளாராம். இன்று இரவு கூடும் தேசிய தலைவர்கள் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படலாம் என்ற நிலை உள்ளது. பெரும்பாலும் தொகுதியிலேயே சுற்றி வருபவருக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள் விபரமறிந்த கதர்சட்டைகள். யாருக்கோ சீட்டு ஒதுக்குங்க வேட்பு மனுவுக்கு கடைசி நாள் வரப்போகுது என்கின்றனர் கூட்டணி கட்சியினர்.