Skip to main content

''விரைவில் எனது முடிவைத் தருகிறேன் என்றார்'' -ஆளுநரைச் சந்தித்தபின் அமைச்சர் ரகுபதி பேட்டி

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

"He said that I will give my decision soon"- Minister Raghupathi interviewed after meeting the Governor

 

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடை மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆளுநரைச் சந்தித்திருந்தார்.

 

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்த நிலையில், சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இணைய வழி சூதாட்டங்களை தடுப்பதற்காகவும், ஒழுங்குமுறை படுத்துவதற்காகவும் தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தருவதைப் பற்றிய ஆளுநரின் கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறோம். இன்றைக்கும் ஆளுநரிடத்தில் ஒரு அரை மணி நேரம் அதைப் பற்றிய விளக்கங்களை எல்லாம் தந்திருக்கின்றோம். ஆளுநரும் இன்னும் அந்த மசோதா எனது பரிசீலனையில் இருக்கிறது என தமிழக முதல்வரிடம் சொல்லுங்கள். விரைவில் நான் எனது முடிவை தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

 

அவசரச் சட்டத்திற்கும் இந்த சட்டத்திற்கும் வித்தியாசம் கிடையாது. அவசரச் சட்டம் இயற்றப்பட்ட போது ஆன்லைனில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 17. இப்பொழுது அதனுடைய எண்ணிக்கை 25. நேரில் விளையாடுவதற்கும் ஆன்லைனில் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அங்கே ப்ரோக்ராம் செட்டப் செய்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து பணத்தைக் கொள்ளையடித்துக் கொள்வார்கள். அது மக்களுடைய பணம். உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எஸ்.எம்.எஸ் வருகிறது. உடனே வந்து விளையாடுங்கள் உங்களுக்கு 8000 தந்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அதை நம்பி விளையாடப் போகிறார்கள். ஆனால், இறுதியில் எட்டு லட்ச ரூபாய்  இழந்துவிட்டு அந்த குடும்பம் நிர்கதியாக நிற்கிறது. எனவே, இதைத் தடை செய்ய வேண்டும். எனவே, இதைத் தடை செய்ய ஒப்புதல் தர வேண்டும் என தமிழக முதல்வர் சார்பில் ஆளுநரிடம் கேட்டுள்ளோம். இப்பொழுது வரை 21 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருக்கிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.