Skip to main content

அரசுப் பள்ளியில் ஜி.வி.பிரகாஷின் திட்டம்...

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
government school


 

மேற்பனைக்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் நடிகர் ஜி.வி.பிரகாஷின் திட்டத்தில் மழலையர் வகுப்பை அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி தொடங்கி வைத்து மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்


திரைப்பட நடிகர் ஜி.வி.பிரகாஷ் அரசுப் பள்ளிகளை வளப்படுத்தவும், அரசுப்பள்ளிகளை மூடுவதை தடுத்து மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும் அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்கி அதற்காண செலவுகளை தன்னார்வ அமைப்புகளோ அல்லது தனி ஒருவரோ ஏற்றுக் கொண்டால் அரசுப்பள்ளிகளை காப்பாற்ற முடியும் என்று 3 ஆண்டுகளுக்கு ஒரு அரசுப் பள்ளியை தத்தெடுத்து அதற்காண அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டதுடன் இதே போல ஆர்வமுள்ள இளைஞர்களும் தத்தெடுக்கலாம் என்றார்.


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை துபாயில் பொறியாளராக உள்ள நிமல் ராகவன்  3 ஆண்டுகளுக்கு மழலையர் வகுப்பு நடத்த ஆசிரியர் புத்தகம் மற்றும் அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டதால் புதன் கிழமை மழலையர் வகுப்பு தொடக்கவிழா பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியை சுமதி தலைமையில் முன்னால் ஊராட்சிமன்றத் தலைவர் கோவிந்தராசு சிதம்பரம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. விழாவில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி திராவிடச்செல்வம் (பொ) கலந்து கொண்டு வகுப்புகளை தொடங்கி வைத்து புத்தகங்களை வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர் சதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியை செல்வராணி நன்றி கூறினார்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாரதிராஜாவிற்கு வில்லனாக நடித்துள்ளேன்” - ஜி.வி. பிரகாஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
gv prakash speech at kalvan audio launch

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாரதிராஜா, "இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜி.வி. நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத் தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்" என்றார். 

நடிகர் ஜி.வி. பிரகாஷ், "இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

Next Story

போன சம்மருக்கு மிஸ்ஸிங்; இந்த கோடையில் களமிறங்கும் ஜி.வி பிரகாஷ்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
gv prakash kalvan movie trailer released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இதனிடையே, 'கள்வன்' படத்தில் ஜி.வி பிரகாஷோடு, பாரதிராஜாவும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவானா கதாநாயகியாக நடிக்க தீனா, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாத்திங்களில் நடித்துள்ளனர். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி.ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. மேலும் கடந்த வருட கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. 

gv prakash kalvan movie trailer released

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கும் பிறகு தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. ஏப்ரல் 4அம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.