Published on 04/09/2020 | Edited on 04/09/2020

தமிழகத்தில் குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏக்கள் காலமானதால் கடந்த ஆறு மாதங்களாக காலியாக உள்ளது. இந்நிலையில் இன்று இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பீகார் சட்டமன்ற தேர்தலோடு நாட்டில் உள்ள 65 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றியும் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், விரைவில் தமிழகத்தில் குடியாத்தம், திருவெற்றியூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒருவேளை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் நவம்பர் 29-ஆம் தேதிக்கு முன்னதாக குடியாத்தம், திருவெற்றியூரில் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.