Skip to main content

நான்கு நாட்களில் திருமணம்; திடீரென வந்த செல்போன் அழைப்பு - துக்க வீடாக மாறிய கல்யாண வீடு

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

groom lost their life with four days left for the wedding

 

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஐவேலி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். 27 வயதான இவர் அதே பகுதியில்  எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், விக்னேஷின் வீட்டில் அவருக்கு சில மாதங்களாக பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் எதிர்பார்த்தபடி சரியான வரன் அமையாமல் இருந்து வந்தது. அதே சமயம், மகனுக்கு வரன் அமையவில்லையே என கவலையோடு இருந்த பெற்றோருக்கு, சேலம் ஏத்தாப்பூரில் பெண் இருப்பதாக உறவினர்கள் மூலம் தகவல் வந்துள்ளது. அதன்பிறகு, விக்னேஷுடன் அவரின் பெற்றோரும் சேர்ந்து பெண் பார்க்க சென்றுள்ளனர். அப்போது, அந்த பெண்ணை விக்னேஷிற்கும் அவரின் பெற்றோருக்கும் பிடித்துப்போக, இரு வீட்டிலும் ஜாதகம் பார்த்துள்ளனர். ஜாதகமும் பொருத்தமாக இருந்ததால் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துள்ளது. 

 

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 20ஆம் தேதியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அடுத்து மே 25ஆம் தேதியன்று திருமணம் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். அதே நேரம் விக்னேஷும் திருமணப் பெண்ணும் அடிக்கடி செல்போனில் பேசி மகிழ்ந்துள்ளனர். இதற்கிடையில், இருவீட்டு பெரியவர்களும் திருமண வேளையில் பிசியாக இருந்துள்ளனர். இத்தகைய சூழலில், திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில், புது பூகம்பம் ஒன்று வெடித்துள்ளது. ஒருபுறம் திருமண வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போது புதுப்பெண்ணின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண் தன்னுடைய பெயர் அஸ்மா என்றும் தான் சங்ககிரியில் குப்தா காலனியில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். 

 

தொடர்ந்து பேசிய அவர், தான் ஒரு திருநங்கையாக இருப்பதால் விக்னேஷ் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். அப்போது, யாரோ நண்பர்கள் தான் ஃபோன் செய்து விளையாடுகிறார்கள் என நினைத்துக்கொண்டு அலட்சியமாக பேசிய புதுப்பெண்ணிடம் அந்த திருநங்கை திடீரென அழ ஆரம்பித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த மணப்பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகம் வர ஆரம்பித்துள்ளது. அதன் பிறகு, "இவ்ளோ நாள் பழகியதாக சொல்றிங்களே.. ஒரு போட்டோ கூடவா எடுக்கல” என விபரமாக கேட்க, அழுதுகொண்டே பேசிய அஸ்மா, "ஃபோட்டோதானே வேணும்.. இதோ உன்னோட வாட்ஸப் நம்பருக்கு அனுப்புறேன் பாரு" என கூறிவிட்டு ஃபோனை வைத்துள்ளார்.

 

இந்நிலையில், குழப்பத்தில் இருந்த புதுப்பெண்ணின் செல்போனுக்கு உடனே வாட்ஸப்பில் நிறைய ஃபோட்டோக்கள் வந்துள்ளன. அந்த ஃபோட்டோக்களைப் பார்த்த புதுப்பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அதே சமயம், திருமணத்திற்கு நான்கு நாட்களே இருக்கும் நிலையில், தங்கள் மகள் அழுவதைக் கண்ட பெற்றோர், அவரிடம் நடந்த விஷயத்தை கேட்டுள்ளனர். அதன்பிறகு, நடந்த எல்லாவற்றையும் புதுப்பெண் விபரமாகக் கூறி வாட்ஸப்பில் வந்த புகைப்படங்களையும் காட்டியுள்ளார். அதிர்ந்து போன பெற்றோர், புது மாப்பிள்ளை விக்னேஷிற்கு போன் செய்து கடிந்து கொட்டியுள்ளனர். 

 

இதையடுத்து, விக்னேஷ் சில விளக்கங்களைக் கூறியும் சமாதானம் ஆகாத பெண்ணின் பெற்றோர், விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து நடந்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக கூறியுள்ளனர். மேலும், அங்கிருந்த விக்னேஷையும் அழைத்து விசாரித்துள்ளனர். இதற்கு மேல் பொய் சொல்லவே முடியாது என்பதை புரிந்துகொண்ட விக்னேஷ், பெற்றோரிடமும் பெண்ணின் உறவினரிடமும் மனம் விட்டு பேசியுள்ளார். சங்ககிரி, குப்தா காலனியில் புதிதாக கட்டப்பட்டிருந்த வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலைக்குச் சென்றபோது அந்த வீட்டின் உரிமையாளர் அஸ்மாவிற்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் சில காலம் அவரோடு நெருங்கி பழகியதாகவும் கூறியிருக்கிறார்.

 

மேலும் அவர் ஒரு திருநங்கையாக இருப்பதால் திருமணம் செய்துகொள்ள பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என நினைத்துக்கொண்டு பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு, அஸ்மாவிடம் விக்னேஷின் பெற்றோர் பேசியிருக்கின்றனர். அப்போது, "நான் விக்னேஷை எனது கணவராக நினைத்து கொண்டுதான் இத்தனை நாட்கள் பழகினேன் என்றும், அவரை என்னால் மறக்க முடியாது என்றும் தெளிவாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, விக்னேஷின் பெற்றோரிடம் பேசும்போது அவரை மாமா, அத்தை என்று உறவு முறையில் அழைத்துள்ளார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ் மற்றும் அவரது பெற்றோர் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போயியுள்ளனர். அதே சமயம், இத்தகைய அடுத்தடுத்த சம்பவங்களால், விக்னேஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். யாரிடமும் பேசாமல் மிகுந்த கவலையில் இருந்த விக்னேஷ் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது அம்மாவின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதன்பிறகு, வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் தனது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், திருமணத்திற்கு நான்கு நாட்களே இருந்த நிலையில் மணமகன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.