Skip to main content

மளிகை கடையில் புகுந்து வாலிபரை கடத்தியது ஏன்? பிடிபட்ட வடமாநில வாலிபர்கள் பரபரப்பு தகவல்!

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

 grocery store youth incident police investigation

 

சேலத்தில், மளிகை கடைக்குள் புகுந்து வாலிபரை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

சேலம் பட்டைக்கோயில் பகுதியில் வசித்து வருபவர் மூலாராம் (வயது 52). ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். சின்னக்கடை வீதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மகன் ஜெய்ராம் (வயது 22). கடந்த ஜூன் 2- ஆம் தேதி மளிகை கடையில், ஜெய்ராம் வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அந்தக் கடைக்கு வந்த நான்கு பேர் அவரை காரில் கடத்திச் சென்றனர். 

 

இச்சம்பவம் குறித்து சேலம் நகர காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருள் வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், அவரை கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது. கடத்திய கும்பலும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. 

 

கடத்தல் கும்பல், பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் பெங்களூருவுக்கு விரைந்து சென்று ஜெய்ராமை மீட்டு வந்தனர். அப்போது கடத்தல் கும்பலை பிடிக்க முடியவில்லை. 

 

ஜெய்ராமிடம் விசாரணை நடத்தியதில் கடத்திச் சென்ற கும்பலை பற்றிய முழு விவரமும் தெரிய வந்தது. அதன்பேரில் பெங்களூருவில் பதுங்கியிருந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாகாராம், பிரகாஷ், தினேஷ் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை சேலம் நகர காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

 

குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை சப்ளை செய்ததற்கு ஜெய்ராம் பணம் கொடுத்து வந்துள்ளார். ஆனால், கடைசியாக வாங்கிய புகையிலை பொருள்களுக்கு பணம் தரவில்லை. இதனால் ஜெய்ராமை கடத்திச்சென்று, அவருடைய தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ள விவரங்கள் விசாரணையில் தெரிய வந்தன. 

 

இதையடுத்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கட்டடத் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
25 years in prison for a construction worker for A 9-year-old girl was misbehaviour in vellore

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (39). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கடத்தி அருகில் உள்ள மாங்காய் தோட்டத்தில் கட்டிப் போட்டு சுரேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி இந்த வழக்கில் நேற்று (15-03-24) தீர்ப்பளித்தார். அதில், சுரேஷ்குமார் மீது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

Next Story

எல்லாத்துக்கும் ஒரு ரேட்டு; லஞ்சப் புகாரில் சிறைத்துறை டி.ஐ.ஜி! 

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Bribery Complaint trichy prison DIG

திருச்சி மத்திய சிறையில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு படிப்பும், தொழிற்கல்வியும், உளவியல் ரீதியாக அறிவுரைகளும் வழங்கப்பட்டு வந்தன. அதேபோல், இச்சிறைச்சாலைக்குள் 250 ஏக்கர் பரப்பளவிலுள்ள விவசாய நிலத்தில், இதற்கு முன்பு சிறை கண்காணிப்பாளர்களாக இருந்தவர்கள், கைதிகளைக்கொண்டு விவசாயம் செய்து காய்கறிகள், கீரை வகைகளை விளைவித்து, விற்பனை மற்றும் உணவகம் என்று பெரிய அளவில் வர்த்தகமே செய்துவந்தனர்.

ஆனால் தற்போது சிறைத்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டாள், கைதிகளுக்கு இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை வழங்காமல், அலுவலகத்திற்கு வருவதும், அலுவலக ரீதியான பணிகளைச் செய்வதுமாக மட்டுமே தனது கடமையை முடித்துக்கொள்கிறார் என்று கூறப்படுகிறது. அதேபோல், சிறைத்துறையின் டி.ஐ.ஜி.யாக இருக்கும் ஜெயபாரதியும் கைதிகளின் நலனுக்காக பெரிய அளவில் எந்த பணிகளையும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. இரண்டு பெண் அதிகாரிகளும் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை எந்த செய்தியாளர்களின் அழைப்பையும் எடுப்பதில்லை.

டி.ஐ.ஜி. மட்டும் தன்னால் முடிந்தவரை சம்பாதிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், திருச்சி மண்டலத்திற்குட்பட்ட 29 கிளைச் சிறைகளில், ஒவ்வொன்றிலிருந்தும் மாதாமாதம் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தாக வேண்டுமென்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறையிலுள்ள கைதிகளின் உணவுக்காக அரசு வழங்கும் படிக்காசு, சிறைக்குள் கைதிகளுக்கு தனிப்பட்ட சலுகைகள் செய்து தருவதற்கு தனியாக ஒரு ரேட் என்று கொடிகட்டிப் பறக்கிறார் டி.ஐ.ஜி. சமீபத்தில் கூட பட்டுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற விசாரணைக் கைதி பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் திருச்சி மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.

இந்நிலையில், தன்னை தஞ்சாவூர் சிறைக்கு அனுப்ப வேண்டுமென்று உளவுப் பிரிவு முதல்நிலை தலைமைக் காவலர் பிரபாகரனிடம் கேட்டுள்ளார். இத்தகவலை பிரபாகரன் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் சொன்னதோடு மட்டுமல்லாமல், செந்தில்குமாரிடமிருந்து டி.ஐ.ஜி.க்கு 50 ஆயிரமும், அவருக்கு 40 ஆயிரமும் பெற்றுக்கொண்டு அவரை தஞ்சை சிறைக்கு பத்திரமாக அனுப்பி வைத்துள்ள செய்தி, காவலர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

டி.ஐ.ஜி. ஜெயபாரதி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேட்டபோது, "முற்றிலும் தவறான தகவல். சிறைக்குள் யாராவது கிளப்பிவிட்ட புரளியாக இருக்கும்'' என்று தன் மீதான லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தார்.

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.