Skip to main content

குறைதீர்ப்புக் கூட்டம்; விவசாயிகளை பார்த்து கட்டப்பஞ்சாயத்து செய்யாதீர்கள் என்ற வேளாண் இணை இயக்குநர்

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

Grievance Meeting; Associate Director of Agriculture Don't do Kattpanchayath with the farmers

 

காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் தரக்குறைவாக பேசியதால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் குறை தீர்ப்பு கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரையா தலைமையில் விவசயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்ரு நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அறிக்கையை வாசிக்க ஆரம்பித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளராக இருந்து வரக்கூடிய நேரு இந்த அறிக்கை தொடர்பாக பேச எழுந்தார். அவர் பேசுகையில் குறுகிட்ட வேளாண் இணை இயக்குநர் நீங்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர். கட்டப்பஞ்சாயத்து போல் இங்கு பேசக்கூடாது, உட்காருங்கள் என்று கூறியுள்ளார்.

 

வேளாண் இயக்குநரின் தரக்குறைவான பேச்சைக்கேட்ட விவசாயிகள் பலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்ய முற்பட்டும் விவசாயிகள் அதனை பொருட்படுத்தாமல், வேளாண் இயக்குநர் தன் பேசிய பேச்சை திரும்ப பெறும் வரை கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கூறி அலுவலகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதனை டொடர்ந்து கூட்டத்திற்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வேளாண் இயக்குநர் கூறிய வார்த்தையை திரும்ப பெற விவசாயிகள் அறிவுறுத்தினர். கூட்டம் முடிந்ததும் இது குறித்து விசாரிக்கிறேன் என மாவட்ட ஆட்சியர் உறுது அளித்த பின் கூட்டம் நடைபெற்றது. மேலும் வேளாண் இணை இயக்குநர் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக கூறினார். 

 

இதன் பின் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடை பெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.