Skip to main content

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் குறை தீர்ப்பு முகாம்!

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

Grievance adjudication camp headed by Additional Director of TN Police

 

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வாரந்தோறும் புதன்கிழமைகளில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும் எனத் தமிழ்நாடு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். 

 

அதன்படி  தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் தலைமையில், திருச்சி மாநகர மற்றும் திருச்சி சரகத்திலுள்ள திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தீர்வு கிடைக்கப் பெற்றதா என்று கண்டறியும் வகையில் மாபெரும் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

 

இச்சிறப்பு முகாமில் திருச்சி மாநகரத்திலிருந்து 180 மனுக்களும் திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்கள் அடங்கிய திருச்சி சரகத்திலிருந்து 203 மனுக்கள் என மொத்தம் 383 மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களிடம் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு), பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தும் விசாரணை செய்தும் பெரும்பாலான மனுக்களில் 283 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது

 

இச்சிறப்பு முகாமில் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் பேசுகையில், முதலமைச்சர் காவல்நிலையங்களில் பொதுமக்கள் தங்களது புகார்களை எந்த சிரமமுமின்றி பதிவு செய்ய வேண்டும் எனவும், அம்மனுக்கள் மீது குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகக் கூறினார். இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களது குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

 

Grievance adjudication camp headed by Additional Director of TN Police

 

மேலும் திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரக பகுதிகளில் உள்ள மாணவ-மாணவியருக்கு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்தும், போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்தும் அமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம், காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம் & ஒழுங்கு சங்கர், இ.கா.ப., தலைமையில் திருச்சி உறையூர் பிஷப் ஹீபர் கல்லூரி அரங்கத்தில் நேற்று (07.06.2023) மதியம் 3 மணிக்கு நடைபெற்றது.  இக்கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் இ.கா.ப., திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா இ.கா.ப., காவல் துணை ஆணையர், திருச்சி சரகத்தை சேர்ந்த காவல்துறை துணை தலைவர், மாநகர ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.