Skip to main content

பணம் தராத ஆத்திரத்தில் தாத்தாவை கத்தியால் குத்திய பேரன்!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

The grandson who stabbed his grandfather in a rage

 

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகேசன் (75) - லட்சுமி தம்பதி. இவர்களுக்கு செல்லத்துரை, பாபு என இரு மகன்கள், ராஜாத்தி என்ற ஒரு மகள் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அதேபோல் இதில் அனைவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், முருகேசன் மகன் செல்லத்துரை என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது இரண்டாவது மகன் பாபு 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், பெரியவர் முருகேசனின் மனைவி லட்சுமியும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார்.

 

இந்த நிலையில் முருகேசன் தனியாக வசித்துவந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக கைத்தடி உதவியோடு வாழ்ந்துவந்த முருகேசன், அப்பகுதியில் உள்ள சிலருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து வசூல் செய்துவந்துள்ளார். அதற்கு உதவியாக அவரது இளைய மகன் பாபுவின் மகனும், பேரனுமான சின்னத்துரையை அழைத்துச் சென்று பணம் வசூல் செய்துவந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் முருகேசன் வட்டிக்குக் கொடுத்து வசூலித்த பணத்தில் தனது மகள் ராஜாத்திக்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இதைக் கண்ட அவரது பேரன் தாத்தாவிடம், “அத்தைக்கு ஏன் பணம் கொடுத்தாய்” என்று கேட்டுள்ளார். இதனால் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி முருகேசன், கழுத்தில் கத்தியால் குத்திய நிலையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்து அவரது மகள் ராஜாத்தி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிவுசெய்து குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், முருகன், தனிப்பிரிவு எஸ்.ஐ. சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் குற்றவாளி குறித்து விசாரணை நடத்திவந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், வெளியாட்கள் யாரும் முருகேசனை கொலை செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து முருகேசன் உறவினர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதன்பேரில் அவரது பேரன் சின்னத்துரை (15) என்பவர் போலீஸ் விசாரணையின்போது முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தனது தாத்தா முருகேசனை கடந்த 22ஆம் தேதி அதிகாலை கத்தியால் குத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

 

வட்டிக்கு வசூலித்த பணத்தை தனது மகளுக்கு கொடுத்ததோடு மற்ற பேரப் பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்துவிடுவாரோ என்ற கோபத்தில் அவரை கொலை செய்ததாக சிறுவன் சின்னதுரை கூறியுள்ளான். இதையடுத்து போலீசார் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் கூர்நோக்கு சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்தனர். பெரியவர் முருகேசன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளியைக் கைது செய்ததை அடுத்து மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக் தனிப்படை போலீசார் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.