![Govt bus incident Tragedy of the young woman](http://image.nakkheeran.in/cdn/farfuture/R9M-PZ3Wgf_lR1A523EVmthFhZjkxQVEYMeT8dd6rFs/1699959639/sites/default/files/inline-images/sattur-bus.jpg)
அரசு பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அலமேலுமங்கைபுரம் என்ற கிராமத்தில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் முத்துமாரி (வயது 23) என்ற இளம்பெண் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 10 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.