![c1](http://image.nakkheeran.in/cdn/farfuture/E_QUjMzUy7IUl5gWFGzP8HhPMMZ2-6ln8sqzs7Bml9Q/1664688180/sites/default/files/2022-10/cmo32311222.jpg)
![c2](http://image.nakkheeran.in/cdn/farfuture/QKbGkj2Uma0UlDmJVJ2czutAiPqOyggld5n7a7JiS6A/1664688180/sites/default/files/2022-10/cmo323111222.jpg)
![c3](http://image.nakkheeran.in/cdn/farfuture/xZAJoHjdF84EYm7rU-oRFoQGLh4oAf4xOnUGtQVVtH4/1664688180/sites/default/files/2022-10/cmo3232312.jpg)
Published on 02/10/2022 | Edited on 02/10/2022
மகாத்மா காந்தியின் 154- வது பிறந்தநாளையொட்டி, தமிழக அரசு சார்பில் இன்று (02/10/2022) சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர். பின்னர், சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் காந்திய இசை பாடல் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.